மனமிருந்தால் மார்க்கமுண்டு
UPDATED : டிச 21, 2015 | ADDED : டிச 21, 2015
*கடிவாளமிட்ட குதிரை சரியான பாதையில் செல்வது போல, கட்டுப்பாடு கொண்ட மனம் வாழ்க்கைப் பாதையில் சரியாகச் செல்லும்.* காலையில் கண்விழிக்கும் போதும், இரவில் துாங்கச் செல்லும் முன்பும் கடவுளை வழிபட மறவாதீர்கள்.* மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.* செல்வம், அதிகாரம், ஆள்பலம் இவையெல்லாம் தற்காலிகமானவை என்பதை உணர்ந்தால் மனதில் ஆணவம் உண்டாகாது.-சாய்பாபா