நல்லவர்களுடன் சேரு
UPDATED : ஜூலை 05, 2015 | ADDED : ஜூலை 05, 2015
* பற்களுக்கு இடையே நாக்கு கடிபடாமல் தப்புவது போல, தீயவர்களுடன் இருக்க நேர்ந்தாலும் ஒதுங்கி நில்லுங்கள். * பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல, நல்லவர்களோடு சேர்ந்தாலே வாழ்வில் உயர்வு உண்டாகும். * உலகம் நமக்கு நிரந்தரமானது அல்ல. வாழ்க்கைப் பயணம் முடியும் வரை தான் இங்கு நமக்கு வேலை. * உழைப்பினால் கிடைக்கும் பணமே சிறந்தது. அதில் உண்டாகும் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தையில்லை. * சத்தியத்தைப் பேசுவதும், சத்தியவழியில் நடப்பதும் பக்தி மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடு. - சாய்பாபா