உள்ளூர் செய்திகள்

அன்பு ஊற்று பெருகட்டும்

* காண்பதை எல்லாம் கடவுள் நிலைக்கு உயர்த்தும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.* விதை முளைத்து மரமாகி கனி தருவது போல, மனிதனும் வளர்ந்து சமுகத்திற்கு நன்மை அளிக்க வேண்டும்.* உள்ளத்தில் அன்பின் ஊற்று இல்லாவிட்டால், வழிபாடு என்னும் கருவியால் தோண்டி அன்பைப் பெருகச் செய்யுங்கள்.* கடவுள் கைகளை நமக்கு அளித்திருக்கிறார். நம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வு வளம் பெறும்.* அறிந்தாலும் அறியாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளே. அதை நாம் அறிய முற்படுவதில்லை.- சாய்பாபா