உள்ளூர் செய்திகள்

சவாலைச் சந்திப்போம்

* உலகில் 'அன்பு செய்யும் ஒரே இனம் மனித இனம் மட்டுமே. இங்கு ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்கிறது. அது தான் அன்பு மதம்.* உலகில் 'இதயத்தின் மொழி' என்ற ஒரே ஒரு மொழி மட்டுமே இருக்கிறது.* அறிவு எதையும் பிரித்துப் பார்க்கும். ஆனால் அன்பு சேர்த்து வைக்கும்.* ஒவ்வொரு அனுபவமும் ஏதாவது ஒரு உணர்வின் வழியாக, உடலளவில் விளைவை ஏற்படுத்தும். * உன்னைக் கடவுளின் வேலையாள் என்ற சிந்தனையை வளர்த்துக் கொள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே.* அலைபாயும் மனதால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியாது.* ஒரு மனிதனின் நன்னடத்தை, அவனுடைய மனநிலையைச் சார்ந்திருக்கிறது* வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சந்தியுங்கள். வாழ்க்கை ஒரு கனவு; அதனை நனவாக்குங்கள். வாழ்க்கை ஒரு விளையாட்டு; அதில் ஈடுபடுங்கள். வாழ்க்கை அன்புமயம்; அதனை அனுபவியுங்கள். - சாய்பாபா