உள்ளூர் செய்திகள்

அன்புக்கு மதிப்பு அதிகம்

* கடவுள் நமது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவரை எப்போதும் மறக்கமாட்டேன். யார் எதிர்த்தாலும் உண்மையை கைவிடமாட்டேன். எதற்காகவும் பயப்படமாட்டேன் என்ற லட்சியங்களை மனதில் விதைத்துக் கொண்டு வாழுங்கள்.* உண்மை எதற்கும் பயப்படுவதில்லை; பொய் நிழலைக் கண்டுகூட பயப்படுகிறது.* கடவுள் அனைத்தையும் நிகழ்த்துபவராக இருக்கிறார். மனிதர்கள் அவரால் ஆட்டுவிக்கப்படும் கருவிகளே.* எளிமையாகவும், கடமை உணர்ச்சியுடனும் வாழுங்கள். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.* அன்புடன் செய்யப்படும் எந்த வேலைக்கும் மதிப்பு அதிகம். அன்பில்லாத இடத்தில் பக்தி இருப்பது இல்லை.* மனிதர்களிடம் சமயம் குறித்த கோட்பாடுகள் விதைக்கப்பட வேண்டும் * தியாகம் செய்வதால் மட்டுமே, நிலையான வெற்றியைப் பெற முடியும்.- சாய்பாபா