பிரார்த்தனையை விட மேலானது
UPDATED : டிச 11, 2017 | ADDED : டிச 11, 2017
*மக்களுக்கு சேவை செய்வதை விட பலன் தரும் பிரார்த்தனை வேறில்லை.*அணிகலன் பலவானாலும், தங்கம் ஒன்றே. அது போல மதங்கள், ஆயிரம் இருந்தாலும் கடவுள் ஒருவரே. *சொல்வது யாருக்கும் எளிது. ஆனால், வாக்களித்தபடி நடப்பது மிக கடினமானது. *பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது. *பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும். - சாய்பாபா