படித்தாலும் பண்பு கெடலாமா!
* சீதை, அனுசூயா போன்ற புராணகாலப் பெண்களை வாழ்வின் வழிகாட்டியாகப் பின்பற்ற வேண்டும். வேதகாலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தாலும் குடும்பப் பொறுப்பைப் புறக்கணிக்கவில்லை. * கல்வியறிவு பெற்ற பெண்கள், நம் பண்பாட்டை கெடுத்து விடக் கூடாது. கற்ற கல்வியால் விவேகம் உள்ளவர்களாகவும், நல்லது கெட்டதைப் பகுத்தறியும் புத்திசாலிகளாகவும் திகழ வேண்டும். * ஆண்களைப் போல பெண்களும் கல்விகற்பது நல்லவிஷயம் தான் என்றாலும் கட்டுப்பாடற்ற சுதந்திர உணர்வுடன் இருக்க நினைப்பது சரியானதல்ல. * சமுதாயத்தின் அடிப்படை அஸ்திவாரமே குடும்பம் தான். குடும்பம் என்னும் கட்டமைப்பே நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறது. ஆன்மிகப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் பெட்டகங்களாக பெண்கள் திகழ வேண்டும். * பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்த்து ஆளாக்க வேண்டியது பெரிய பொறுப்பு பெண்களுக்கு இருக்கிறது. அதனால் பெண்களை நாட்டின் கண்கள் என்று தான் சொல்ல வேண்டும்.- சாய்பாபா