கடமையில் கண்ணாயிருங்கள்!
UPDATED : பிப் 03, 2013 | ADDED : பிப் 03, 2013
* காற்றை எந்த இடத்திலும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. அதுபோல ஆன்மிக காற்றும் உலகெங்கும் வீசிக் கொண்டு இருக்கிறது. இதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது. * கடவுள் நமக்குரியவர் என்று நினைப்பதை விட நாம் கடவுளுக்குரியவர் என்று சிந்திப்பது உயர்வானது.* பஜனையில் பாடிக் கொண்டிருப்பது மட்டுமே பக்தியாகாது. உள்ளத்திலும், நடத்தையிலும் உண்மையும், தூய்மையும் வெளிப்படுவதே பக்தியின் இலக்கணம். * வெற்றியோ, தோல்வியோ நமக்கு கிடைப்பது கிடைக்கட்டும் என பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு கடமையில் முழுமையாக ஈடுபடுங்கள்.* கோபம், பேராசை, காமம், பொறாமை போன்ற மலைப்பாம்புகளின் பிடியில் மனிதன் சிக்கித் தவிக்கிறான். * கடவுளைச் சரணடைந்து விட்டால், அவரருளை எளிதாகப் பெறலாம்.- சாய்பாபா