உள்ளூர் செய்திகள்

இதுவே சிறந்த காணிக்கை!

* கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் உங்களைச் சுற்றியோ, அருகிலோ, பக்கவாட்டிலோ இருக்கிறார்.* மனிதன் இரக்ககுணம் கொண்டவனாக இருக்க வேண்டும். ஏழை எளியவர்க்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். * நல்வாழ்வு பெறுவதற்கான உயர்ந்த வழியை ஏற்படுத்தித் தரும் கல்வியே பயனுள்ளது.* கடவுள் நாம் சொல்வதைக் கேட்கக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறார்.* தீமையில் இருந்து விடுபட்ட தூயமனமே, கடவுள் விரும்பும் சிறந்த காணிக்கையாகும். * மனைவியின் ஒழுக்கமே, கணவனைக் காப்பாற்றும் ஆயுதம்.* கடவுள் ஒருவரே. எந்த வடிவத்தை வழிபட்டாலும் அவர் ஒருவரையே நாம் வழிபடுகிறோம்.* எப்போதும் கடவுள் சிந்தனையில் இருப்பது தான் உண்மையான சாதனை. * ஒழுக்கத்துடன் வாழ்வது அவசியம். ஒழுக்கம் இல்லாத வாழ்வு அஸ்திவாரம் இல்லாத கட்டிடத்தை போன்றது. - சாய்பாபா