காலம் பொன்னானது
UPDATED : டிச 20, 2017 | ADDED : டிச 20, 2017
*காலம் பொன்னை விட உயர்ந்தது. இழந்த பொன்னை கூட சம்பாதிக்கமுடியும். ஆனால் காலம் திரும்பாது.*கடமையை செய்யாமல் நேரத்தை வீணாக்குபவன், பூமிப் பந்திற்கு பாரமாகி விடுவான்.*மற்றவரின் குறைகளை காணும் சமயத்தில் பெருந்தன்மையுடன் மன்னியுங்கள். *கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனித சமுதாயம், விலங்குகள் வாழும் காடாக மாறி விடும்.*கடவுளே காலத்தின் வடிவம். நேரமே அவரது உடலாக இருக்கிறது.- சாய்பாபா