நமக்கு ஐந்து அம்மா!
<P>* ஏழைக்கு உணவளித்தல், சிறைக்கைதிகள், பார்வையற்றோர், மனநோய் மருத்துவமனையில் உள்ளவர்கள், காதுகேளாதோர், பேசும் திறனற்றவர்கள் ஆகியோருக்காக தொண்டாற்றுங்கள். <BR>* ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து அன்னையர் உண்டு. அவர்கள், உடலுக்கு பிறப்பளித்த தேகமாதா, பால் தரும் கோமாதா, ஒன்றுக்கு நூறாக விளைவிக்கும் பூமாதா, வாழ்கின்ற சொந்த தேசமாதா, ஆன்மிகச் செல்வம் தரும் வேதமாதா ஆகியோர்.<BR>* மனிதவாழ்வு தீயில் பிறந்து, தீயில் வளர்ந்து, தீயிலேயே முடிகிறது. அன்னையின் கதகதப்பான கருவில் பிறந்து ஜீரணமண்டலத் தீயால் காப்பாற்றப்பட்டு, முடிவாக மரணச்சிதையில் முடிகிறது. இப்படி அக்னியே மானிடப் பிறப்புக்குக் காரணமாய் அமைகிறது. <BR>* அன்பின் ஊற்று இல்லையென்றால், பூஜை, வழிபாடு போன்ற கருவிகளைக் கொண்டு உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள். அன்பு பெருக்கெடுக்கும். <BR>* நம்பிக்கை பல அற்புதங்களைச் செய்ய வல்லது. மனதை சந்தேகம் கொள்ளாமல் அலைபாய விடாமல் நம்பிக்கையில் உறுதி கொள்ளுங்கள். சூரியன் தலைக்கு நேராக இருக்கும் போது, நிழல் கீழே விழாதது போல, நம்பிக்கையில் உறுதியுடன் நின்றால் சந்தேக நிழல் விழுவதில்லை.</P>