உள்ளூர் செய்திகள்

அன்புப்பரிசு யாருக்காக?

* எந்த வேலையில் ஈடுபட்டாலும், அதற்கு உரிய நேரத்திற்குள் செய்து முடியுங்கள்.* வெறும் பேச்சோடு மட்டுமில்லாமல், நடத்தையாலும் உங்கள் செயல்பாடு உண்மையாக்கப்பட வேண்டும்.* கடவுளை நம்புங்கள். பாவம் செய்ய அஞ்சுங்கள். இதுவே மேலான தொண்டு.* முயற்சி நம் கையில். பலனோ கடவுளின் கையில்.* வெறும் பூஜையில் ஈடுபடுவதோ, பஜனை செய்வதோ பக்தியல்ல. உயிர்களை நேசிப்பதே சிறந்த பக்தி.* நம் உடல் கடவுள் கொடுத்த அன்புப் பரிசு. அதை அவருக்குரிய பணிகளுக்காக அர்ப்பணியுங்கள். -சாய்பாபா