தினமும் வழிபாடு செய்
UPDATED : ஆக 10, 2017 | ADDED : ஆக 10, 2017
*'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என கடவுளிடம் தினமும் வழிபாடு செய்யுங்கள்.*கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதைக் கேட்பது தியானம்.*ஈடுபடும் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனையாக அமைய வேண்டும்.*கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தை சொல்வதை விட சிறந்த வழிபாடு வேறில்லை.*யாரையும் தவறாக நினைக்க கூடாது. மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டுமே காண வேண்டும்.- சாய்பாபா