உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / எல்லை அறிந்து செயல்படுவது நல்லது!

எல்லை அறிந்து செயல்படுவது நல்லது!

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக, தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தங்களது குறைகளை சுட்டிக் காட்டுவோர் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைப்பது வழக்கமாக உள்ளது. காவல் துறையை தங்களது உத்தரவுகளுக்கு பயன்படுத்தி, யாரை வேண்டுமானாலும், எந்த வழக்கைபோட்டும் கைது செய்து விடுவர்.அந்த வகையில், தி.மு.க.,வுக்கு வலை பதிவுகள் வாயிலாக, மிகப்பெரிய குடைச்சல் செய்து வந்த, 'யு டியூப்பர்' சவுக்கு சங்கர் மீது கொலை வெறியோடு இருந்ததுஆளுங்கட்சி. அவர் எப்போது வகையாகசிக்குவார் என்று காத்திருந்தனர். அவர், பெண் போலீசாரை அவதுாறாக பேசியதாக புகார் பெறப்பட்டு, சிறையில் அடைத்தது.பின், வழக்கம் போலவே கஞ்சா வழக்கு மற்றும் பலரிடம் புகார்கள் பெறப்பட்டு, சவுக்கு சங்கரை ரவுடியாக சித்தரித்து, குண்டர் சட்டத்தில் அடைத்து, அவர்ஜாமினில் வர முடியாத அளவுக்கும் செய்தது. மேலும், அவரை தமிழகத்தில்உள்ள பல நீதிமன்றங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வந்ததும், பெண் போலீசாரை மட்டுமே பாதுகாப்புக்கு அனுப்பி, அசிங்கம்செய்ததையும் நாம் அனைவரும் பார்த்து வந்தோம்.இவை எல்லாம், அரசை விமர்சனம் செய்பவர்கள் பயப்பட வேண்டும் என்பதை போன்று செய்யப்பட்டது. ஆனால், 'அய்யோ பாவம் சவுக்கு சங்கர்' என்ற அனுதாபத்தை பொது மக்களிடம் உண்டு பண்ணி விட்டது. நல்லவேளை, நம் சென்னை உயர் நீதிமன்றம், 'ஆளும் அரசை, கொள்கைகளை, செயல்களை விமர்சனம் செய்வதை, பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக கருத முடியாது' என்று சுட்டிக் காட்டியது மட்டும் அல்லாமல், சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்குகளில் உரிய சட்டப் பிரிவுகள் கீழ் நடவடிக்கைகள் எடுத்து தீர்வு காண அறிவுரை கூறியுள்ளது சரியே.மேலும், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தின் உத்தரவாதத்தை எடுத்துச் சொல்லி, அந்த சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அரசே, தன் இயந்திரங்களை பயன்படுத்தி குரல் வளையை நெறிப்பது, ஜனநாயகத்துக்கு அழகல்ல என்றும் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும்,'ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பான முறையில் உரிமையை பயன்படுத்த வேண்டும்' என்று சவுக்கு சங்கர் போன்றவர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. இனியாவது, இரு தரப்புமே தங்கள் எல்லையறிந்து செயல்படும் என நம்புவோம்.

அனைத்துக்கும் அரசியலே காரணம்!

வி.சி.கிருஷ்ணரத்னம்,காட்டாங்கொளத்துார்,செங்கல்பட்டு மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: வங்கதேசத்தின் ேஷக் ஹசீனா, கடந்த 5ம் தேதி முதல், 'முன்னாள் பிரதமர்'ஆகி விட்டார்.தற்போதைய தற்காலிகஅரசின் தலைவர் முகம்மது யூனுசிடம்,வங்கதேச சிறுபான்மை அமைப்புகளான ஹிந்து, புத்த, கிறிஸ்துவ ஒற்றுமை கூட்டமைப்பு மற்றும்பூஜா உத்ஜபன் பரிஷத் ஆகிய அமைப்புகள்கடிதம் ஒன்றை அளித்துள்ளன. அதில், '5-ம் தேதி முதல் சிறுபான்மையினருக்கு எதிராக, வங்கதேசத்தில், 205 தாக்குதல் சம்பவங்கள் நடந்துஉள்ளன. 'ஆயிரக்கணக்கான ஹிந்து குடும்பங்கள் நிர்க்கதியாகிவிட்டன. பல கோவில்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. பல பெண்கள் தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். பல இடங்களில் கொலைகள் நடந்துள்ளன. மற்ற சிறுபான்மையினரும் இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.'நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், ​சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறைகளை நடத்தி, இந்த சாதனையை களங்கப்படுத்த ஒரு கட்சி சதி செய்வதை நாங்கள் வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறோம். 'ஆகஸ்ட் 5-ம் தேதி துவங்கிய வகுப்புவாத வன்முறை, வங்கதேசத்தில் சிறுபான்மையினரிடையே பரவலான அச்சம், பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைதியின்மை, சர்வதேச கண்டனத்தையும் விளைவித்துள்ளது.இந்தப் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர நாங்கள் வலியுறுத்துகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கதேச ஹிந்து புத்த - கிறிஸ்துவ ஒற்றுமைகூட்டமைப்பு பொதுச் செயலர் ராணா தாஸ்குப்தா, வங்கதேச பூஜா உத்ஜபன் பரிஷத் தலைவர் பாசுதேவ் தார் ஆகியோர், கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டமைப்பின் மூன்று தலைவர்களில் ஒருவரான நிர்மல் ரொசாரியோ, 'எங்கள் வாழ்வு, பேரழிவு நிலையில் உள்ளதால் நாங்கள் பாதுகாப்பைத் தேடுகிறோம்.நாங்கள் இரவில்விழித்திருக்கறோம்.எங்கள் வீடுகள் மற்றும் கோவில்களை காத்து வருகிறோம். இதுபோன்ற ஒரு சூழலை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. நாட்டில் மத நல்லிணக்கத்தை மீட்டெடுக்க அரசாங்கத்தை நாங்கள் கோருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.ஒற்றுமை கவுன்சிலின்பிரதான தலைவர் காஜல் தேவ்நாத், 'யாரும் இல்லாதநிலையில் வீட்டையோ, கோவிலையோ விட்டுச் செல்ல முடியாத நிலை உள்ளது. பல ஹிந்து சமூகத்தினர் இப்போது மற்றவர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 'நானும் நண்பர் வீட்டில்தங்க வேண்டியகட்டாயத்தில் உள்ளேன். சிறுபான்மையினரைத் தாக்கியவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக சிறுபான்மையினர் தாக்கப்பட்டால், அது மேலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வீடுகளை எரிப்பதும், கொள்ளையடிப்பதும் நீதிக்கு வழிவகுக்காது' என்று கூறியுள்ளார். சிறுபான்மை சமூகங்கள், வெவ்வேறு நாடுகளிலும், வெவ்வேறு மதங்களை கொண்டுஉள்ளன.நம் நாட்டில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர்;முஸ்லிம்கள் சிறுபான்மையினர். வங்கதேசத்தில், 'உல்டா!'எந்த நாட்டிலும், பெரும்பான்மையினர், சிறுபான்மையினரை அரவணைத்து செல்லும் பழக்கத்தை கைகொள்ள வேண்டும். நம் நாட்டிலும், 30 ஆண்டுகளுக்கு முன் அரவணைப்புமிக நன்றாக கோலோச்சியது. அரசியல்வாதிகளின் பிரிவினை மற்றும் பாரபட்ச பேச்சுகள், அனைத்து இன மக்கள் மத்தியிலும் பகைமையை உண்டு பண்ணி விட்டன. தற்போது, இந்த நிலை தான் வங்கதேசத்திலும் தென்படுகிறது. ஓட்டுக்காக சர்வ அட்டூழியங் களையும் மேற்கொள்ளும்அரசியல்வாதிகள் இருக்கும் வரை, இனப் போராட்டம் தீக்கங்குகளை கக்காமல்இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 15, 2024 10:00

பழங்குடியின மக்களை அவர்களின் அப்பாவித்தனத்தால் குறிவைத்து அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயல்கின்றனர். இந்த முறை ஒடிசாவில் பழங்குடியின பெண்ணுக்கு நோயை குணப்படுத்துவதாக கூறி கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


RAMAKRISHNAN NATESAN
ஆக 15, 2024 06:39

சென்னை கண்ட 8 மேயர்களில் 7 மேயர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதில் முக்கியமான மேயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்த 474 ஏரிகளின் எண்ணிக்கை தற்போது வெறும் 43. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன. சென்னையில் நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடி ஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி, ஆவடி ஏரி, கொளத்தூர் ஏரி இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, பெருங்களத்தூர், கல்லு குட்டை ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடிய நல்லூர் ஏரி, வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூர் ஏரி, திருநின்றவூர் ஏரி, பாக்கம் ஏரி, விச்சூர் ஏரி, முடிச்சூர் ஏரி, சேத்துப்பாடு ஏரி ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு, செம்பாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, ஏரிக்கரை சாலை, கால்வாய்க்கரை சாலை, முகப்பேர் ஏரி, மாம்பலம் ஏரி.... என காணாமல் போன ஏரிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பார்த்தீங்களா, எல்லாம் மக்கள் தவறு தற்போதை ஆளும் கட்சியும், முன்னால் ஆண்டக் கட்சியும் எளிதில் சொல்லிவிட்டுக் கடந்து போகக் கூடும். சென்னை மாநகராட்சி ஆண்ட மேயர்களும், தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் தான் இவ்வளவு ஆக்கிரமிப்புகளுக்கும் முழு பொறுப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அத்தனை பேரிடமும் லஞ்சம், ஊழல் செய்து ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டது இந்தக் கழகங்கள் என்பதை திண்ணமாக நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஆக்கிரமிப்பாளர்களின் பண வேட்டைக்குச் சிக்கிய அத்தனை பேரும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தான். தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளில் நீந்திக் கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான். நாளை ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் என்றப் பெயரில் அரசு இடிக்க ஆரம்பித்தால் அதில் சீரழியப் போவதும் சாமாணியர்களே. இந்த படு கேவலமான ஊழல் பெருச்சாளிகளை மறக்கலாமா சென்னைவாசிகளே?


Devan
ஆக 15, 2024 06:02

இந்த அரசு மற்றவர்களை மோடி, குஷ்பு, அண்ணாமலை மற்றும் பன்னீர் செல்வம், இபி எஸ் என எல்லோரையும் திட்டி கேவலமான வார்த்தைகளால் விமர்சிக்க வைக்கலாம். ஆனால் அரசின் குறைகளை கனெக்ஷன் குடுக்காத பைப் வைத்தது வடிகால் அமைக்காமல் 95% முடிந்தது என்று பொய் சொல்வதை சுட்டிக்காட்டினால் போலீஸ் என்ற குண்டர்களின் சட்டம் பாயும். இதை கோர்ட் கண்ணை மூடிக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கும். விடியா அரசு, விடியா இந்தியா


Devan
ஆக 15, 2024 05:56

அரசு மத்திய அரசையும் அதன் - தலைவரையும தரகுறைவான வார்த்தைகளால் விமர்சிக்கலாம். அதன் பேச்சாளர்கள் பெண்களைக்கூட விட்டு வைக்காமல் விமர்சிக்கலாம். ஆனால் அரசை அதன் தவறை சுட்டிக


Dharmavaan
ஆக 15, 2024 13:39

கோர்ட் சவுக்கு கைதுக்குத்தடை விதிக்க வேண்டும் கோர்ட் அனுமதி இல்லாமல் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்படாமல் கைது கூடாது என்னும் தடை


Sathyanarayanan Sathyasekaren
ஆக 15, 2024 02:58

இது அரசியல் வியாதிகளால் மட்டுமல்ல, இந்த பாலைவன மத நிலையங்களில் போதிக்கப்படும் ஜிகாத் என்ற விஷ மூளை சலவையின் விளைவு, கத்திக்கு பயந்து மதம் மாறிய கோழைகள் வாரிசுகள் தங்களை மெக்காவில் இருந்து குதித்தவர்களாக எண்ணிகொளவ்து, இரு தலைமுறைக்கு முன் உறவினர்களாக இருந்தவர்களை பரம விரோதிகிலாக என்ன தூண்டுவது மசூதிகளில் போதிக்கப்படும் வெறுப்பு உணர்வு. இவர்கள் எந்த நாட்டிலும் நிம்மதியாக இருப்பதாக சரித்திரமே கிடையாது. சைனா மட்டுமே இந்த பயங்கரவாத மதத்தை அடக்குவதில் வெற்றிபெற்று உள்ளது.


புதிய வீடியோ