ஹேய் கமா! , : ; ?
நாம் எழுதும்போது வார்த்தைகளுக்கு நடுவில், இடைவெளி விட்டும், கமா, கோலன், செமிகோலன் ஆச்சரியகுறி, கேள்விக்குறி, போன்றவற்றையும் உபயோகப்படுத்துகிறோம் இல்லையா செல்லூஸ்...இத்தகைய பழக்கத்தை கொண்டு வந்தவர்கள் யார் தெரியுமா பட்டூஸ்?வார்த்தைகளுக்கு நடுவே இடைவெளி விடும் வழக்கத்தை கிரேக்கர்கள்தான் கொண்டுவந்தனர். அதே போல் கமா, கோலன், செமிகோலன் பழக்கத்தையும் அவர்களே அறிமுகப்படுத்தினர். ஆனால், இவர்கள் செமிகோலன் அடையாளத்தை கேள்விக்குறியாக பயன்படுத்தினர். இப்போது நாம் பயன்படுத்தும் கேள்விக்குறி லத்தீன் மொழியில் இருந்து வந்தது.