மிஸ்ட்லெட்டோ!
எப்போதுமே பசுமையாகக் காட்சி யளிக்கக் கூடியது இந்த 'மிஸ்ட்லெட்டோ'. இவை காட்டு மரங்களுக்கு மத்தியிலும், பழமரங்கள் அடியிலும் வளரக் கூடியவை. இதைப் பழைய காலத்து ஐரோப்பியர்கள் புனிதப் பூவாகக் கருதினர். வழிபாட்டு இடங்களில் வைத்து அலங்கரித்தனர். இதற்கு நோயைக் குணமாக்கும் சக்தியும், மந்திர சக்தியும் உண்டென அவர்கள் நம்பினர்.