கவிதைச்சோலை! - நீயும் எழுது!
ஒரே அறைகாந்திஜியின் கன்னத்தில்முப்பது கோடி பேருக்குவலித்தது...சுதந்திரம் மலர்ந்தது!நீயும் எழுதுசிந்தனை சிற்பியேஒரு குடிமகன்குடியை மறந்தால்அதுவே உன் வெற்றி!உடலாலும், மனதாலும்புண்படும் மாதர் நிலைஉயர நீயும் எழுதுபடிப்போரின்விழியோரம் நீர்கசிந்தால்அதுவே உன் வெற்றி!படித்த இளைஞனின்கண்ணீரை விலை பேசும்அரசியல்வாதியின்நாடி தளரநீயும் எழுதுஏழை இளைஞனுக்குஎளிதில் வேலை கிடைத்தால்அதுவே உன் வெற்றி!இரவில் எரியும்ஒற்றை தீபம்ஊருக்கே வழி காட்டும்நீயும் எழுதுஒற்றை ஆளாய்லஞ்சம் ஒழியும்அதிகார மமதை அகன்றால்அதுவே உன் வெற்றி!கொட்டிய மழையில்குப்பை மேடு கரைந்ததுசுயநலம் நீங்கிபொதுநலம் நாடநீயும் எழுதுபொறாமை குணம்முழுதும் பொசுங்கினால்அதுவே உன் வெற்றி!மெழுகாய் உருகிவார்த்தை ஒளி வீசினால்இளைஞன் மீண்டெழுவான்நீயும் எழுதுமண் வாசம் வீசட்டும்போதை உலகம் தெளிந்தால்அதுவே உன் வெற்றி!பாரதி சேகர், சென்னை.