உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சூடிக் கொள்வதில் சுகம்!* மனம்ஒரு மளிகைக் கடை!உள்ளேதொங்கும் துலாக்கோலில்எடைக்கல்லாய் இருப்பதுஎதிர்பார்ப்பு!* விற்பனை செய்யும்விருப்பத்தோடு காத்திருக்கிறோம்கடை முழுக்ககமகமக்கும் கனவுகளோடு!* சில கடை கனவுகள்சீக்கிரமாய் விற்றுவிடுகின்றன...சிலருக்கோமாலை விழும்வரைஆளே வருவதில்லை!* வாங்க வருபவர்கள்கடையை வைத்துத்தான்பொருளைத் தீர்மானிக்கின்றனர்!* மளிகைக் கடையில்உப்பு தொடங்கிஊறுகாய் வரை...எல்லாப் பொருட்களும்இருக்கவே செய்யும்!* விற்பனை செய்யும்பொருட்களை விடவும்கற்பனை கொஞ்சம்அதிகமாய் இருந்தால்கனவுகளைக் கூடகாலி செய்துவிடலாம்!* பொருளை விற்பவன்புத்திசாலியாக மட்டும்இருந்தால் போதாது...பொறுமைசாலியாகவும்இருக்க வேண்டும்!* பொய்மை கலக்காதபொருட்களை வாங்கவேபூமியில் எல்லாரும்பிரியப்படுகின்றனர்!* கனவுகள் தங்கமல்ல...விளம்பரம் செய்துவியாபாரம் செய்ய!* பூ கடைகளுக்குபோர்டு தேவையில்லை...வாடும் பூக்கள்தான் கனவுகள்என்றாலும்...சூடிக் கொள்பவர்களுக்கு அதுதானேசுகம் கொடுக்கிறது!* கனவுகளில் மென்மையும்கடையில் உண்மையும்கலந்து செய்யும் வியாபாரம்என்றும் களை கட்டும்!— சு.விஜயலட்சுமி, கடம்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !