உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

தேடலில் தான்...தேடாமல் எதுவும்கிடைப்பதில்லை...தட்டாமல் எதுவும்திறப்பது இல்லை!தேடாமலும், தட்டாமலும்எளிதாய் எதுவும் கிடைத்தால்...வாழ்க்கை சுவாரஸ்யம் அற்றுவதங்கிப் போய்விடும்!வரங்களை வேண்டிஇறைவனிடம் கைநீட்டுபவனை விட...விரல்கள் பத்தையும்மூலதனமாக்கி, உழைப்பவன்முழுமைப் பெறுகிறான்!முயற்சியற்று வீணேமுடங்கிப் கிடப்பவனை...சோம்பல் சிறைப்பிடிக்கிறது...நம்பிக்கைக் கொண்டுநகர்ந்து செல்பவனைத் தேடிவெற்றி மாலை இடுகிறது!சரித்திரம் படைப்பவனும்சாதிக்கத் துடிப்பவனும்சறுக்கி வீழ்வதில்லை...அவமானங்களை ஒதுக்கித் தள்ளிஅதிலிருந்து எழுகிறவன்தோல்வியே அடைவதில்லை!தூரத்தில் என்பதில்லை...காலடியில் கூட கிடைக்கலாம்தேடுவோம்... தேடுவோம்...தேடலில் தான் வாழ்க்கை!— கருமலைப் பழம் நீ, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !