உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இடி இறங்கும் காலம்!பணம் சேரச்சேரஅது தன்னைதானே தின்றுவிடுமா?என்ன வந்தாலும்நிரம்ப மறுக்கிறதுஎப்போதும்இதய கஜானா!பணம் நிறைவைப் பிரசவிப்பதில்லை...அது, ஆசை முட்டையிட்டுஅடைகாக்கிறது!அன்பை ஆகுதியாக்கிபெற்ற பிள்ளைகள்பட்டம் பெற்ற கையோடுபறந்து விடுகின்றனர்தூர தேசங்களுக்குகடல் தாண்டிஅவர்கள் சிறகடிப்பதுகவுரவம் சம்பாதிக்க!விமானங்களில் பயணிக்கையிலேயேபண்பையும், பாசத்தையும்உச்சியிலிருந்து உதிர்த்துஇதயத்தை மயானமாக்கிகண் மறைகின்றனர்!மேல்நாடுகளின்மேகம் தொடும்அபார்ட்மென்டுகளில்அல்லும் பகலும்கணினிகளோடு கரைந்துபுதையல் வேட்டையில்புகுந்து விடுகின்றனஇளந்தளிர்கள்!கண்டம் விட்டுகண்டம் கடந்துவந்தபெயர்தெரியாப் பறவைகள்குளிர்காலத்தின்கூதல் முடிந்தவுடன்தாய்நாடு திரும்புகின்றன'தங்கள் துணையோடு!'இந்தபணப்பறவைகளோவேறு இனப்பறவைகளோடுஜோடி சேர்ந்துவந்து இறங்குகின்றனபெற்றோர்களின் எதிர்பார்ப்பில்இடியைப் பொழிந்தபடி!— சுவாதி, நெல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !