உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

கண்ணா நீ எங்கே?கோகுலக் கண்ணா நீ நரகாசுரனைவதம் செய்து விட்டதாய்தீபாவளி கொண்டாடுகிறோம் நாங்கள்!உன்னால் வதம் செய்யப்பட வேண்டியநரகாசுரர்களோ இன்னும் நிறைய... மரங்களை, வனங்களை பிறர் மனங்களை கொன்றவர்கள்!ஜாதி, மதஅரசியல் கொலையாளர்கள்பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாளர்கள்...தெய்வம் நீஅசுரனைக் கொன்றாய்இங்கே...மிருகங்களைப் போல்மனிதனை மனிதனேவேட்டையாடுகிறான்!பணத்தை சுவாசித்துவாழப் பழகிவிட்ட மனிதன்செய்யத் தகாதவற்றையும்செய்யத் துணிந்து விடுகிறான்!வாழ வைத்து வாழு என்றுவரையறுத்துஅழித்து வாழ்ந்துமுரண்பட்டுப் போகிறான்!மனிதம் இருப்பதால் தானேமனிதன் என்று பெயர் - இந்தஇரண்டின் கலவையை எப்படி அழைப்பது?நல்லவர்களை வாழ்விக்ககெட்டவர்களை அழித்தாய் நீ...இன்று தீயவை வளர்ந்தோங்கிநல்லவை அழிகிறது!நீ வெண்ணெய் திருடி விளையாடினாய்...எங்களவர்கள்பிறர் வாழ்க்கையைத் திருடிஅரை நிர்வாணமாய்அலைய விடுகின்றனர்!பேராசை வரம் பெற்ற அசுரர்கள்...வாழும் போதே நரகம் காட்டும்பெருநோய் சாபக்கேடு...இது நிதர்சன உண்மை!ஒன்றின் அழிவில் தான்இன்னொன்றின் வளர்ச்சிஇது விதி...அழிவின் விளிம்பில்மனிதன் நின்று கொண்டிருக்கிறான்கண்ணா... நீ எங்கே?— எஸ்.செல்வம், அருப்புக்கோட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !