உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

யார் வரப் போகிறீர்கள்!வறுமையின் சுவடுகளாகவறண்டு போனவர்களுக்குஆறுதல் சொல்லயார் வரப் போகிறீர்கள்...தேயும் நம்பிக்கையைஉயிரில் தேக்கிதிண்டாட்டங்களுக்கு மத்தியில்புதைந்து போகும் புனிதர்களுக்குகை கொடுக்கயார் வரப் போகிறீர்கள்...காந்தீய போராட்டங்களை ஆயுதங்களாக ஏந்தியும்அரண்மனை வாசல்கள்அடைக்கப்பட்டே கிடப்பதால்சமாதிகளாகும் சக்கரவர்த்திகளுக்குசரித்திரம் எழுதயார் வரப் போகிறீர்கள்...வள்ளுவனின் எழுதுகோலுக்குவல்லமை சேர்த்தஉழவனின் ஏர்முனைக்குஏற்பட்டுள்ள புற்றுநோய்க்குவைத்தியம் செய்யயார் வரப் போகிறீர்கள்...தேர்தல் தோறும்வாக்குறுதிகள் அணிவகுப்பில் மயங்கிகட்டியிருந்த கோவணத்தைகழற்றிக் கொடுத்துவிட்டுநிர்வாணமாக நிற்கும் உழவர்களின்மானத்தை காக்கும்அவதாரம் எடுக்கயார் வரப் போகிறீர்கள்!- கவிதாசன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !