கவிதைச்சோலை!
பாராட்டுங்கள்!நடை தவழும் குழந்தையைநயமாய் பாராட்டுங்கள் - அதன்நடை வேகம் அதிகரிக்கும்!கற்பவனின் கற்றலைகனிவாக பாராட்டுங்கள் - அவன்கற்கும் வேகம் இரு மடங்காகும்!கலைஞனின் கலைத்திறனைகண்ணியமாய் பாராட்டுங்கள் - அவன்படைப்பாற்றல் பன்மடங்காகும்!உழைப்பவனின் உடல் உழைப்பைஉயர்வாய் பாராட்டுங்கள் - அவன்உடல் வலிமை கூடி விடும்!உறவுகளின் உன்னதத்தைஉண்மையாய் பாராட்டுங்கள் - அவர்களின்அன்பும், அக்கறையும் அதிகரிக்கும்!வெட்டியானின் வேலையைவெட்கமின்றி பாராட்டுங்கள் - அவர் தம்வேதனைகள் தீர்ந்து விடும்!எதிராளியின் ஏற்றத்தைஎகத்தாளமில்லாமல் பாராட்டுங்கள் - அவன்எண்ணத்தில் மாற்றம் வரும்!உங்களை நீங்களேஉயர்வாய் பாராட்டுங்கள் - உங்கள்உத்வேகம் எழுச்சி பெறும்!பாராட்டுங்கள்...மனமார்ந்த பாராட்டு,பெறுபவனுக்கு உந்துகோல்!எஸ்.ஆர். சாந்தி, மதுரை.