உயரமான நீர்வீழ்ச்சி!
இந்தியாவில் மிக உயரமான நீர்வீழ்ச்சி எங்கிருக்கிறது என்று கேட்டால், 'மேகாலயாவில் இருக்கிறது...' என, சொல்லலாம். ஒரு காலத்தில் அதிக மழை பொழியும் இடமாக சிரபுஞ்சி இருந்தது. ஆனால், இன்று மனிதர்கள் இயற்கை வளங்களை அழித்து வருவதால், சிரபுஞ்சியும் அதன் மழை வளத்தை இழந்துள்ளது.இங்கு, 340 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டும் நொகாலிகாய் நீர்வீழ்ச்சி உள்ளது. இதைக் காண ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இது, அண்டை நாடான, வங்காள தேசம் எல்லை அருகே இருக்கிறது.— ஜோல்னாபையன்