வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சகோதரியே, உங்கள் கடிதம் படித்தேன். என் இதயம் கனக்கிறது. எதிர் வீட்டு சகோதரர் பற்றி லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளியுங்கள். பின்னர் அவர் குடும்பத்துக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்காது.
இது ஒரு விதத்தில் படிக்கும் போது அந்த பெண்ணின் மீது கோவம் வரும் ஆனால் உண்மையில் லஞ்சம் வாங்குவர்கள் என்ன தண்டனை கிடைத்து விட்டது நம் நாட்டில் இப்ப லஞ்சம் ஊழல் செய்தவர்கள் தான் நன்றாக இருக்கிறார்கள் உலக பணக்கார்களாக இருக்கிறார்கள் அவர்களது மூன்றாம் நான்காம் வாரிசுகள் எல்லோரும் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள் நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலை செய்கிறவர்கள் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான கடிதங்களை அரசின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று ஒரே அந்தஸ்த்தில் இருக்கும் இருவரில் ஒருவரால் எப்படி முடிகிறது.....
லஞ்சம் வாங்கும் கணவனை மனைவிதான் திருத்த வேண்டும். இங்கு மனைவியே லஞ்சம் வாங்க நிர்பந்திக்கிறார். லஞ்சம் வாங்காத கணவனை நினைத்து கொள். நீ நெஞ்சை நிமிர்த்தி நடை போடலாம். லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து, வங்கி கணக்குகள் முடங்கி, கணவர் சிறை சென்று, சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டு, பிள்ளைகள் பள்ளியிலும் வெளியிலும் அவமானப் பட்டு, குடும்பத்தையே ஒதுக்கும் உற்றார் உறவினர் நடுவிலும் உயிர் வாழ வேண்டுமா/ முடியுமா என எண்ணிப்பார். கணவரின் வருமானத்தை சிக்கனமாக செலவு செய்து சிறிது சிறிதாக சேமித்து பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து சமூகத்தில் உயர்ந்த ஸ்தானம் அடைய வாழ்த்துகிறேன்.
குட்
உங்கள் கணவரை நினைத்து கர்வம்கொள் ,நமக்கு எவ்வளவு வந்தாலும் சரிபோவது இல்லை
சம்பளம் தவிர, வேறு உபரி வருமானம் ஏதுமில்லை.???? அவர் குடும்பத்தினர் அனைவரும், விதவிதமான உயர்தர ஆடைகள் அணிவர். அக்குழந்தைகளை பார்த்து, என் பிள்ளைகள் ஏங்குவர்.???? . .உன் பிரச்சினை உடனே தீர , உன் கணவனை தீர , கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை படிக்க சொல்
உன்னுடைய பேராசை உன் பரம்பரையையே பிச்சை எடுக்க வைக்கும். பரவாயில்லையா? ஏழைகளின் பணத்தில் வாங்கும் லஞ்சம், குடும்ப பரம்பரையை துயரத்தில் தள்ளும். ஒவ்வரு தவறான வழியில் வந்த காசும் - ஏழ்மையிலும், மருத்துவ செலவிலும், தீராத துயரத்திலும் குடும்பத்தை தள்ளும் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பவன் நல்ல எண்ணத்தில், அல்லது நல்ல முறையில் வந்த பணத்தை கொடுப்பதில்லை. இதனால் பாவம் மாற்றப்பட்டு, லஞ்ச பணத்தை வாங்கிய குடும்பம் கர்மா வினையை அனுபவித்தே ஆக வேண்டும்.
மதிப்பு என்று ஒன்று உள்ளதை இது போன்ற அதிகாரிகளை பார்க்கும் போது தான் வருகிறது. இப்போது தான் நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவியும் கலவரத்தில் வைத்த நெருப்பில் இறந்து விட்டார். ஒவ்வொரு ஆணின் மதிப்புக்கு அவனுக்கு தோழோடு தோழாக இருக்கும் பெண் பொறுப்பு.
மனம் பொல்லாதது அது சொன்னாலும் கேளாதது. அடுத்தவரைப்பார்த்து லஞ்சம் வாங்கி மாட்டினால்.? எனவே மனத்தை திடப்படுத்தி, உடலில் உன் ரத்தத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொறாமை பேராசை என்னும் தீயை முதலில் விரட்டியடி மகளே. வாழ்க்கை இனிக்கும்.