உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!

கிறிஸ்துமஸ் உலகெங்கும் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. * ஆஸ்திரியாவில் கிறிஸ்துமசுக்கு முதல் நாள், ஒரு மெழுகுவர்த்தியும், ஜனவரி 1ல், மூன்று மெழுகுவர்த்திகளையும் ஏற்றுவர். அப்போது, 'ஆண்டவனை துதிப்போம்...' என்று கூறி பிரார்த்தனை செய்வர்* போலந்து நாட்டில் விரதமிருந்து, சாப்பாடு மேஜையைச் சுற்றி எல்லாரும் அமரும் போது, ஒரு நாற்காலியை இயேசு பிரான் அமர, காலியாக வைத்திருப்பர்* பல்கேரியாவில் கிறிஸ்துமசுக்கு முன் விரதமிருந்து, கிறிஸ்துமஸ் அன்று அடுப்பெரிக்கும் மரத்தின் மேல் சோளத்தை துாவியபடி, வீட்டிற்குள் எடுத்து வருவர். சோளம் துாவுவது சுபீட்சத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !