உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குறிப்பு!

* கையில் வளையல்கள் போடுவதற்கு சிரமமாக இருந்தால், பாலிதீன் கவரை கையில் போட்டுக்கொண்டு, வளையல்களைப் போட, எளிதாக நுழைந்து விடும் * ஒமேகா - 3 அதிகம் உள்ள ஆளி விதை, கறுப்பு எள், வேர்க்கடலை தலா, 100 கிராம் எடுத்து வறுக்கவும். அதனுடன் சிறிது வெல்லம், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான, இட்லி மிளகாய்ப்பொடி தயார் * செடிகள் நடுவதாக இருந்தால், இரண்டு வாரங்களுக்கு முன்பே அந்த மண்ணில் இயற்கை உரங்களைப் போட்டு நன்றாகக் கலந்து விடவும். மண் நன்கு வளமாகி விடும். பிறகு செடிகள் நட்டால் நன்றாக வளரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !