கவிதைச்சோலை - வெள்ளம் வரும் முன்...
* மறக்க வேண்டியவற்றைநினைவில் வைத்து வாடுகிறோம்விலக்க வேண்டியவற்றைசேர்த்துக் கொண்டு அவதியுறுகிறோம்!* தொலைக்க வேண்டியவற்றைபற்றிக் கொண்டு கிடக்கிறோம்ஒழிக்க வேண்டியவற்றைவளர்த்துக் கொண்டு இருக்கிறோம்!* புறக்கணிக்க வேண்டியவற்றைஆதரித்து தவிக்கிறோம்அழிக்க வேண்டியவற்றைஉரமிட்டு, நீரூற்றி வளர்க்கிறோம்!* தவிர்க்க வேண்டியவற்றைபின்பற்றி வருந்துகிறோம்களையெடுக்க வேண்டியவற்றைவிட்டு வைத்து தொடர்கிறோம்!* எரிக்க வேண்டியவற்றைபாதுகாத்து வைக்கிறோம்புதைக்க வேண்டியவற்றைபின் தொடர செய்கிறோம்!* கழிக்க வேண்டியவற்றைகூட்டிக்கொண்டு செல்கிறோம்ஒதுக்க வேண்டியவற்றைபிணைத்தபடி அழுகிறோம்!* முன்னெச்சரிக்கை உணர்வைமுற்றிலும் தொலைத்தோம்விழிப்புணர்வு திறனைபொறுப்பின்றி தவற விட்டோம்!* வெள்ளம் வரும் முன் அணையிடும்கடமையிலிருந்து தவறுகிறோம்ஆயுள் முழுவதற்குள் வாழ்ந்திடும்வாய்ப்பை கை நழுவ விடுகிறோம்!- ஆர். ஜெயசங்கரன்,வானூர், விழுப்புரம்