மேலும் செய்திகள்
ஆட்டோ மோதி பசு பலி
26-Jul-2025
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரெ தாலுகாவின், பனகல் கிராமத்தில், வீடு ஒன்றின் முன்பாக கொட்டகையில் இரண்டு பசுமாடுகள் கட்டப் பட்டிருந்தன. நேற்று அதிகாலை 3:00 மணியளவில், காரில் வந்த மர்ம நபர்கள் பசு மாடுகளை கண்டு, காரை நிறுத்தினர். பிரட்டில் மயக்க மருந்து கலந்து, பசுக்களை சாப்பிட வைத்தனர். அவை லேசாக மயக்க நிலைக்கு சென்றதும், காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவியது. பசுக்களின் உரிமையாளர் பனகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Jul-2025