உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எடை சட்டத்தில் மாற்றம் வேண்டாம் என வணிகர்கள் மனு

எடை சட்டத்தில் மாற்றம் வேண்டாம் என வணிகர்கள் மனு

சென்னை:அரிசி, பருப்பு வகை, மாவு வகை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள், 25 கிலோவுக்கு கீழ் உள்ள பேக்கிற்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.உணவு பொருட்கள் எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்ய, தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், உணவுப் பொருட்கள் எவ்வளவு எடை உடைய பாக்கெட்டாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., விதிக்கும் நிலை உருவாகும் என்பதால், உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும்.எனவே, எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிடுமாறு, தமிழக அரிசி ஆலை வணிகர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் துளசிங்கம், செயலர் மோகன், டில்லியில், நேற்று முன்தினம் மத்திய உணவு துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Swaminathan L
ஜூலை 29, 2024 14:58

அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், மாவு வகைகள் என்று பெருமளவில் வாங்கி சிறு அளவில் தாங்களே பேக்கிங் செய்து விற்கும் கடைக்காரர்களுக்கு அவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி உண்டு என்றால் எழும் முக்கிய பிரச்சினை அவர்கள் ஜிஎஸ்டி வலைக்குள் வர வேண்டும் என்பதே. அரிசி மாவு பிராண்டட் பேக்கிங்கில் விற்கும் விலைக்கு மூன்றில் இரண்டு அல்லது பாதி விலைக்கு பல கடைகளில் அவர்களின் தயாரிப்பு, பேக்கிங்கில் கிடைக்கிறது. இதற்கெல்லாம் ஜிஎஸ்டி வந்தால் அவர்களுக்குத் தொல்லை தானே?


visu
ஜூலை 28, 2024 09:14

தங்களுக்கு வேண்டிய அமைச்சர் பதவி கிடைக்க விட்டால் விமானநிலையம் வரை போராடும் கட்சி தலைவர்கள் இது போன்ற அக்கல் பிரசனைக்காக ஒரு கண்டனத்தோடு நிறுத்தி கொள்வார்கள் சில்லரை விற்பனைக்கு GST தவறான முடிவு ஆனால் அணைத்து மாநில அரசுகளும் இணைந்தே உயர்த்துகின்றன


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை