உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் பாலம் அடுத்தடுத்து "டமால்": காரணம் கேட்டு மாநில அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்

பீஹார் பாலம் அடுத்தடுத்து "டமால்": காரணம் கேட்டு மாநில அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரில் பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுவது குறித்து, அம்மாநில அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடந்தன. சமீபத்தில் அடுத்தடுத்து 10க்கு மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரவு

இந்த மனு இன்று(ஜூலை 28) தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுவது குறித்து அம்மாநில அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாலங்கள் இடிந்து விழக்காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ES
ஜூலை 29, 2024 22:44

Lol this guys blaming climate change. sorry this is worse than delusion


krishnan
ஜூலை 29, 2024 22:14

now that money has been alloted to Bihar for construction of Road,bridges , the PWD dept / ad co s /staff existing should b Black Listed. Better use L& T, TATAs for the JOBs . if necessary supervised by good inspection agency . OR CPWD.


Ramesh Sargam
ஜூலை 29, 2024 20:49

கோர்ட்டுக்கு காரணம் என்னவென்று தெரியாமல் போனது ஆச்சரியமளிக்கிறது. காரணம் என்ன? ஊழல்தான். கொள்ளைதான். யார் ஊழல் செய்தார்கள், யார் கொள்ளையடித்தார்கள்? வேறு யார், அரசியல்வாதிகளும், பாலம் கட்டும் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகளும்தான்.


தாமரை மலர்கிறது
ஜூலை 29, 2024 19:21

ஊழல் என்பதெல்லாம் இல்லை. காலநிலை மாற்றத்தால், பிஹாரில் அடிக்கடி கடும் வெள்ளம், புயல் ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள பாலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தினமும் சரிகின்றன. இதற்காக தான் மோடி அரசு பிஹாருக்கு அதிக நிதி பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. இன்னும் ஐந்தாண்டில் பீகார் பாலங்கள் பளபளக்கும்.


Narayanan Muthu
ஜூலை 29, 2024 20:04

joke of the year. முட்டுன்னா முரட்டு முட்டு இதுதான்.


Narayanan Muthu
ஜூலை 29, 2024 18:57

எல்லாம் பிப்டி பிப்டி பார்முலாதான். வேறென்ன சம்மந்த பட்டவன் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்யும் தைரியம் யாருக்காவது உண்டா


Senthoora
ஜூலை 29, 2024 17:56

நல்லவேளை தமிழ் நாட்டில் அந்த பாலம் இல்லை, இருந்திருந்தால் அவளவுதான். வானத்துக்கும் பூமிக்கும் துள்ளியிருப்பாங்க.


Indian
ஜூலை 29, 2024 17:51

ஊழல்


a.u chandrasekaran
ஜூலை 29, 2024 16:12

no body cares about this .simply they have kept under bottom/Unless and other wise strong punishment should be given to the concerned authorities then only the situation will improve


மேலும் செய்திகள்









புதிய வீடியோ