உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் தீர்ப்புக்கு தனிநபர் வாரியம் எதிர்ப்பு

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் தீர்ப்புக்கு தனிநபர் வாரியம் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுக்கு, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க அதன் தலைவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.ஜீவனாம்சம் தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்ற அமர்வு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதில், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 125வது பிரிவின்படி, முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் கோர முடியும்.

திருமண உறவு

இந்த சட்டப் பிரிவு, மதச்சார்பற்றது என்பதால், முஸ்லிம் பெண்களுக்கும் பொருந்தும் என, உத்தரவில் அமர்வு கூறியுள்ளது.இந்நிலையில், ஏ.ஐ.எம்.பி.எல்.பி., எனப்படும் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, அதன் செய்தித் தொடர்பாளர் இலியாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:முகமது நபி தெரிவித்துள்ள அனுமதிக்கப்பட்ட தனிநபர் நடவடிக்கைகளில், விவாகரத்து என்பதும் மிகவும் வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ளார். அதனால், திருமண உறவைத் தொடர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். குரானில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, திருமண உறவை தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.திருமண வாழ்க்கையை தொடரவே முடியாது என்ற பட்சத்தில், கடைசி வாய்ப்புதான் விவாகரத்து.இதன்படி பார்த்தால், விவாகரத்து என்பது, முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு எதிரானதாகும். அதனால், முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் என்பது எங்கள் மதக் கொள்கைக்கு எதிரானது.இந்த விவகாரத்தில், சட்ட ரீதியில், அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக ரீதியில், உச்ச நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வாரியத்தின் தலைவர் கலீத் சைபுல்லா ரஹ்மானிக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அரசியலமைப்பு சட்டத்தின், 25வது பிரிவு வழங்கியுள்ள மத உரிமைகளுக்கு எதிராக பொது சிவில் சட்டம் உள்ளது. பல மதங்கள், பல கலாசாரங்கள் உள்ள நம் நாட்டில், பொது சிவில் சட்டம் சாத்தியமில்லை.இதை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.வக்பு சொத்துகள், முஸ்லிம்களின் நலனுக்கானது. அது முஸ்லிம்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதை சீர்குலைக்கும் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் முடிவுகள், வெறுப்பு பேச்சு, வெறுப்பு நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்பதை உணர்த்தியுள்ளது.அடித்துக் கொல்வது போன்ற செயல்கள் நிறுத்தப்படும் என்று நம்புகிறோம். சிறுபான்மையினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரச்னை

வழிபாட்டு தலங்கள் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே உறுதியளித்தபோதும், தற்போது, ஞானவாபி வளாகம், மதுரா ஷாஹி ஈத்கா பிரச்னைகள் தொடர்பாக வழக்குகள் நடக்கின்றன. இதை நிறுத்த வேண்டும்.ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில், டில்லியில், மசூதிகள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். மேற்காசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக, மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பேசும் தமிழன்
ஜூலை 15, 2024 19:45

இதில்... நம்ம இத்தாலி பப்பு நிலைப்பாடு என்ன ??? நாட்டு மக்களிடம் விளக்க வேண்டும்.. இல்லையேல் முஸ்லீம் பெண்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருக்க போகிறாரா ???


VIDHURAN
ஜூலை 15, 2024 16:50

.வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என்கிற உரிமை நமக்கு இல்லை. நமது சட்ட திட்டங்களை ஏற்று கொண்டு நடக்கத்தான் வேண்டும் என்று சொல்லலாம்.


ஆரூர் ரங்
ஜூலை 15, 2024 13:13

வாரியம் எனும் சொல் அரசு நிறுவனத்தையே குறிக்கும். அதனை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்


ஆரூர் ரங்
ஜூலை 15, 2024 13:11

பெரும்பாலான இஸ்லாமியர் நடத்தும் வணிக நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை. சமத்துவம் என்றால் ஐம்பது சதவீத வேலைகளை அளிக்கட்டும். வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாத மனைவியை ஜீவனாம்சம் கூட இல்லாமல் மூன்றே வார்த்தைகளில் மணவிலக்கு செய்வதை அனுமதிக்கும் மதம் இங்கு எதற்கு? ஆண்கள் மட்டுமே உள்ள (கட்டப்பஞ்சாயத்து?) ஜமாஅத் பெண்களின் வாழ்க்கையில் தலையிடுவது முறையற்றது.


K.Muthuraj
ஜூலை 15, 2024 09:51

சவூதி அரேபியாவிலும், ஈரானிலும் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் மூன்றில் ஒரு திருமணம் விவகாரத்தில் முடிகின்றது என்று அறியப்படுகின்றது. விஷயம் அதுவல்ல. அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் எந்த தாய் தகப்பனிடம் ஒன்றி இருக்கும். மேலை நாடுகளிலும் இது தான் பிரச்சினை. நினைத்த மாத்திரத்தில் திருமணம். விவாகரத்து. இப்பொழுது இந்தியாவிலும் இந்த கலாசாரம் வளருகிறது.


பேசும் தமிழன்
ஜூலை 15, 2024 09:38

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவில்லை என்றால் ...தாராளமாக நீங்கள் விரும்பும் நாட்டுக்கு போய் விடுங்கள்.. இங்கே இருந்தால் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ....நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் ....எல்லாம் சரி கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஜீவானசம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது நல்லது தானே ....ஓ ...நல்லது எதையும் நாங்கள் ஏற்க்க மாட்டோம் என்று கூறுகிறீர்களா ???


தமிழ்வேள்
ஜூலை 15, 2024 09:00

ஜீவனாம்சம் தர இயலாது என்றால் கன்னித்தன்மையை திரும்ப தரவேண்டும்... மூர்க்கனுக்கு அவன் ஸ்டைலில் சொன்னால்தான் மண்டையில் ஏறும்


N Sasikumar Yadhav
ஜூலை 15, 2024 08:28

முஸ்லீம் தனிநபர் சட்டவாரியமெல்லாம் இஸ்லாமிய நாடுகளில் வைத்துக்கொண்டு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதத்திற்கு மதம் தனிதனியாக சட்டமெல்லாம் இருக்க கூடாது .


kumar c
ஜூலை 15, 2024 07:17

மதத்தின் அடிப்படையில் சட்டம் அப்போ மத சார்பின்மை ? அப்போ கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் கேட்போமா . நடுநிலை என்பது தேவைக்கு ஏற்ப தெரிந்து எடுப்பது இல்லை. மதத்தின் அடிப்படையில் சட்டம் அப்போ சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பது என்ன ஆச்சு ? மனித நேயத்தோடு பெண்களை பாருங்கள். ஒழுங்கா படிச்சி முடிச்சவனுக்கே வலை கிடைக்கிறது இல்ல. இதுல பிள்ளை பெற்று இளமை இழந்து கல்வி அறிவு இல்லாமல் எப்படி பிள்ளைகளை கரை சேர்ப்பது . எங்கே நம்ம போராளிகள்


பேசும் தமிழன்
ஜூலை 15, 2024 09:40

அவன்னுக எல்லாம் தீர்ப்பை கேட்டவுடன் ....குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுத்து விட்டார்கள்.....இன்னும் கொஞ்ச நாட்கள் கோமாவில் போய் விடுவார்கள் .


subramanian
ஜூலை 15, 2024 07:05

நேரு முஸ்லிம் மத வெறி பிடித்தவர்கள் சொன்ன படி ஆடினார் என்பதற்காக இயற்றப்பட்ட சட்டம் குப்பையில் போட்டு நாட்டை காப்பாற்ற வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை