உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 48 மணிநேரத்திற்குள் ஓட்டு சதவீதத்தை அறிவிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

48 மணிநேரத்திற்குள் ஓட்டு சதவீதத்தை அறிவிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஓட்டு சதவீதத்தை 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடக்கோரிய வழக்கில், 'தவறான குற்றச்சாட்டுகளால் ஓட்டுப்பதிவு பாதிக்கும். தேர்தல் நடக்கும் தற்போதைய சூழலில் மனுவை விசாரிக்க விரும்பவில்லை' எனக் கூறி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.இந்தியாவில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், 6வது கட்ட தேர்தல் நாளை (மே 25) நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ ஓட்டு சதவீதத்தை அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேர்தல் ஆணையம் வாதம்

இந்த வழக்கு இன்று (மே 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ''சந்தேகத்தின் அடிப்படையிலும் அவநம்பிக்கை ஏற்படுத்தவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் எழுப்பி மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்தால் ஓட்டளிக்க வருவதை குறைக்கும். தேர்தல் நடைபெறும் காலத்தில் இதுபோன்ற மனுக்கள் எதையும் நீதிமன்றம் விசாரிக்க கூடாது'' என தேர்தல் ஆணையம் வாதிட்டது.

விசாரிக்க விரும்பவில்லை

இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் தெரிவிப்பது மக்கள் ஓட்டளிக்க வருவதை குறைத்துவிடும். ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்த தவறான குற்றச்சாட்டுகள் ஓட்டுப்பதிவை பாதிக்கும். தேர்தல் நடைபெறும் தற்போதைய சூழலில் மனுவை விசாரிக்க விரும்பவில்லை. இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை'' எனக் கூறி விடுமுறைக்கு பின் வழக்க பட்டியலிட உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சட்டாம்பிள்ளை
மே 25, 2024 09:44

அதெப்படி, ஒவ்வொரு ஓட்டா எண்ணனும்ல. 48 நாளாவது ஆகும்.


தாமரை மலர்கிறது
மே 24, 2024 20:32

தேர்தல் கமிஷன் அக்கப்போர் பேர்வழிகள் வாய்க்கு அவல் கொடுக்க கூடாது. ஜூன் நாலாம் தேதிவரை, எந்த தகவலும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஜூன் நாலாம் தேதி மோடி நாநூற்றிஐம்பது தொகுதிகளை வென்றுவிட்டார் என்று சொல்வது மட்டும் தான் தேர்தல் கமிஷனின் வேலை. அதை ஒழுங்காக செய்தால் போதும். மற்றபடி அதுவரை கதறுபவர்கள் கதறட்டும். ரிசல்ட் வந்ததும் இன்னும் இரண்டு நாளைக்கு கதறி ஒப்பாரி வைப்பார்கள். அவர்களின் ஆசை நிறைவேறவில்லையென்று தெரிந்ததும், கொஞ்சநாள் கழித்து அமைதி ஆகிவிடுவார்கள்.


GMM
மே 24, 2024 17:22

ஓட்டு சதவீதம் தேர்தல் ஆணையம் இரு நாளில் அறிவிக்காவிட்டால், என்ன குடி மூழ்கும்? உள்நோக்க மனுதாரர் சில கோடி அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து குழப்பமான தகவல்/தவறான தகவல் தெரிவிக்க செய்ய வாய்ப்பு உள்ளது. பழியை தேர்தல் ஆணையம் மீது போட்டு, மக்களின் நம்பிக்கையை சிதைக்கலாம். எதற்கு இத்தனை மணி நேரம் என்று பெரிய அதிகாரி போல் மனுதாரர் நிர்ணயம் செய்கிறார்? எப்படி மனு தள்ளுபடி செய்யாமல் பட்டியல் இடப்படுகிறது. ? யார் இந்த ஐந்தாம் படை?


Srinivasan Krishnamoorthi
மே 24, 2024 16:40

சதவீதத்தை தெரிந்து என்ன செய்ய போகிறார்கள் EVM இதுவரை MANIPULATE பண்ண முடியாதது என நம்பப்படுகிறது EVM அனைத்தும் காவலில் வைக்க பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் இதற்கு பொறுப்பு. ஏனெனில் பெரும்பாலான மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள் அதிகாரம் இல்லாதவர்களாக தான் உள்ளனர். மத்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் தான் தரவுகள் உள்ளன. இவற்றை விட முக்கியம். கட்சி பார்வையாளரின் த்ருப்திக்குட்பட்டு EVM ஓட்டுகள் எண்ணப்படுவதே. அப்படி எண்ணிய ஓட்டுகள் நிலவரம் வீடியோ பதிவுகளுடன் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டாலே போதுமானது.


S SRINIVASAN
மே 24, 2024 15:05

at least the correct decision in this case. The judiciary is doing wrong decision for the last one month, but now this decision is welcome


Anantharaman Srinivasan
மே 24, 2024 13:52

நல்லதொரு தீர்ப்பை மக்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் கோர்ட் பல்டி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை