உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான ஓடுதளத்தில் அமர்ந்து சாப்பிட்ட பயணிகள்: விமான நிலையத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

விமான ஓடுதளத்தில் அமர்ந்து சாப்பிட்ட பயணிகள்: விமான நிலையத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மும்பை விமான நிலையத்தில், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் பயணிகள் உணவு சாப்பிட்டது தொடர்பாக விமான நிறுவனத்திற்கும், விமான நிலையத்திற்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து, கோவாவுக்கு, நேற்று முன்தினம், தனியார் துறையைச் சேர்ந்த, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமானம் புறப்பட தாமதமானது. பல மணி நேரம் தாமதமானதால், விமானத்தில் இருந்த பயணியர் கடும் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், விமானம் தாமதமாக புறப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட துணை விமானி அனுப் குமாரை, விமானத்தில் இருந்த சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கினார். இதைப் பார்த்து சக பயணியர் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தன் செயலுக்கு, சாஹில் கட்டாரியா வருத்தம் தெரிவித்தார். எனினும், இது குறித்து, போலீசில் விமான ஊழியர்கள் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாஹில் கட்டாரியாவை கைது செய்தனர். இறுதியில் விமானம், 10 மணி நேர தாமதத்துக்கு பின், கோவாவுக்கு புறப்பட்டது.விமானி அனுப் குமாரை சாஹில் கட்டாரியா தாக்கியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதற்கிடையே, சாஹில் கட்டாரியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி விமானங்களில் பயணம் செய்ய முடியாதபடி, அவரை விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், இண்டிகோ நிறுவனம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.பின் அதே விமானம், கோவாவில் இருந்து டில்லி சென்றது. ஆனால், டில்லியில் அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த விமானத்தில் இருந்த பயணிகள், ஓடுதளத்தில் அருகில் உள்ள விமானங்கள் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து உணவு உண்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.இதனையடுத்து இண்டிகோ விமான நிறுவனத்திற்கும், விமான நிலையத்திற்கும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Krishnamurthy Venkatesan
ஜன 17, 2024 14:08

அந்த விமானத்தின் பொறுப்பு அதிகாரி பயணிகளிடம் தாமதத்திற்கான காரணங்களை தெரியப்படுத்தி மன்னிப்பு கோரி இருந்தாலே மக்கள் சாந்தம் அடைந்து விடுவார்கள். தாமதமான நேரத்தில் அவர்களுக்கு டீ காப்பீ ஸ்னாக்ஸ் போன்றவை வழங்கிருந்தால் ஓரளவிற்கு சமாதானம் அடைந்திருப்பார்கள். "ACCEPT THE MISTAKE" என்ற தாரக மந்திரம் யாருக்கும் புரியவில்லை.


g.s,rajan
ஜன 17, 2024 10:06

தவறுகளை சுட்டிக்காட்டினால் அது இமாலயக் குற்றமா ...???புரியவில்லை .....


g.s,rajan
ஜன 17, 2024 00:04

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சலாமா...???,விமானக் கம்பெனிக்கு ஏற்கனவே பேர் ரிப்பேர்,இப்போ நோட்டீஸ் வேற....


g.s,rajan
ஜன 16, 2024 23:49

இந்தியாவில் பெரும்பாலான விமான நிறுவனங்களை அரசாங்கம் நடத்தாமல் தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர்,தனியார் நிறுவனங்கள் நிச்சயம் பொறுப்பாகச் செயல்படவில்லை ,அரசாங்க நிறுவனம் என்றால் ஓரளவுக்கு சரியாக நடக்கும் .தனியார் நிறுவனங்கள் லாபகரமாகச் செயல்படவில்லை என்றால் இழுத்து மூடி விட்டுச் சென்று விடுவார்கள்,நினைத்தால் விமானம் ஓட்டுவார்கள் இல்லையேல் ரத்து செய்துவிடுவார்கள் .யாரும் தட்டிக் கேட்க முடியாது.தனியார் நிறுவனங்களை என்றும் எப்பொழுதும் நம்ப முடியாது.இந்த நிலையில் நாட்டில் உள்ள எல்லாவற்றையும் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறி தனியார் மயமாக்கினால் என்ன நடக்கும் ....???.


அப்புசாமி
ஜன 16, 2024 17:16

ரன் வே யிலே ஓரமா சமூசா, டீக்கடை தொறக்கலாமே. பயணிகள் நிறைய பேர் வாங்குவாங்க.


Natarajan Ramanathan
ஜன 16, 2024 16:56

வாஷிங்டன் விமான நிலையத்தில் விமானத்தில் எறியபின் கடுமையான பனி பொழிவு காரணமாக நான்கு மணிநேரம் விமானத்தின் உள்ளேயே இருக்க வைத்தார்கள். தண்ணீர்கூட கொடுக்கவில்லை.பிறகு ஒருவழியாக விமானம் புறப்பட்டபின் நள்ளிரவில் உணவு வழங்கியதால் சாப்பிடவும் முடியவில்லை...(LUFTHANSA AIRLINES ON 16 ஜனவரி 2022 )


g.s,rajan
ஜன 16, 2024 15:57

வளர்ந்த நாடுகளில் இது போல நடந்தால் கட்டாயம் நஷ்ட ஈடு கொடுத்து விடுவார்கள் ,இங்கே இந்தியாவில் விமானப் பயணியைக் கைது செய்கிறார்கள் ,விமானப் பைலட்டைத் தாக்கியது தவறு என்றாலும் ஏன் தாக்கினார் என்று ஆராய வேண்டும் ,மக்கள் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வது....???புரியவில்லை ....


g.s,rajan
ஜன 16, 2024 15:07

விமானப்பயணத்தில் பல சமயங்களில் கால தாமதம் செஞ்சு கொலைப்பட்டினி போட்டுவிடுவார்கள், பயணிகள் பசிச்சா என்ன செய்யறது,எங்கே சாப்பிடுவது ...???யார் உணவு கொடுப்பாங்க ...??? இதுதாண்டா இந்தியா .... இதுதான் வளர்ச்சி அடைந்த பாரதம் .... இதுதான் அமிர்தக் காலம் .....


Sathyasekaren Sathyanarayanana
ஜன 16, 2024 20:47

ராஜன், உங்கள் காழ்ப்புணர்ச்சி தெரிகிறது, தனியார் விமான நிறுவனத்தின் செயலுக்கு ஒட்டு மொத்த பாரத்தையும் குறை சொல்வது உங்களின் வெறுப்பை காட்டுகிறது. பிடிக்கவில்லையென்றால் உங்களுக்கு பிடித்த நாட்டிற்கு சென்று சந்தோசமாக இருங்கள்.


g.s,rajan
ஜன 16, 2024 13:40

அமெரிக்காவில் டாலரில் சம்பளம் கொடுக்குறாங்க ,இங்கே ரூபாயில் தானே கொடுக்குறாங்க .இரண்டையும் எப்படி ஒப்பிடுவதாம் ....


மலரின் மகள்
ஜன 16, 2024 12:00

குறித்த நேரத்தில் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவோம் என்றுதானே சொல்லி விமானத்தை இயக்குகிறார்கள் இவர்கள். இந்த விமானத்தில் தற்போதைய சாதாரண வகுப்பு டிக்கெட் விலை ஐந்து மடந்து கூடி இருக்கிறது. எதற்காக அவ்வளவு ஏற்றினார்கள். கொள்ளையோ கொள்ளையல்லவா? விமானப்பயணிகளுக்கு ஏற்படும் அசைவுகரியங்களுக்கு வருந்துகிறோம் என்ற ஒற்றைவரியியில் கூறி பல இழப்புக்களை பயணிகள் ஏற்க வேண்டியிருப்பதற்கு ஒரு இழப்பீடும் தருவதில்லை இவர்கள். தார்மீக அடிப்படையில் விமணியை தாக்கியதற்கு வருந்துகிறோம் என்று பயணியர் சொல்லியவுடன் அவரை எந்த வித தொந்திரவு செய்யாமல் விமானத்தில் பயணிக்க சொல்வதே சரி. இவர்களுக்கென்றால் இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளியா? விமானம் காலதாமதமாக இயங்குவதற்கு காரணம் கொள்ளையடிப்பதுதான். டில்லியிலிருந்து மிக குறைந்த வெளிச்சத்தில் கடும் மூடுபனியில் இயங்கவல்ல விமானங்களை இயக்கவெங்கிடும், அதற்கான பிரத்தியேக பயிற்சிகளை விமான நிறுவனம் வழங்க மறுக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இத்தகைய பயிற்சிக்கு விமானி ஒருவருக்கு மூன்று லக்ஷம் ருபாய் செலவாகும் என்றும் அதனால் ஒரு மாத கால சிக்கலுக்கு எதற்கு செலவு செய்யவேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் கவனம் செலுத்தவில்லை. ஏர் இந்தியா மட்டுமே மூடுபனியில் இயங்கவல்ல வல்லமை பெற்றிருக்கிறது. விமான டிக்கெட்டின் விலையை வைத்திருக்கும் விவாதமே இவர்களின் ஏமாற்று வேலைக்கு சான்று. விமானங்களிலிருந்து ஆம்னி பஸ் நிர்வகிப்போரும் அதன் பிறகு இந்திய ரயில்வேயும் டைனமிக் டிக்கெட் என்று விலையை கூட்டி கொண்டே சென்று கொள்ளையடிக்கும் வித்தையை அமல் படுத்துகின்றன. (அமல் ப்படுத்துவதா அல்லது அமுல் படுத்துவதா ? எது சரி?)


மேலும் செய்திகள்









புதிய வீடியோ