உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கால் நுாற்றாண்டில் பசுமை காலி! கோவையில் வைத்த பல லட்சம் மரங்கள் எங்கே?

கால் நுாற்றாண்டில் பசுமை காலி! கோவையில் வைத்த பல லட்சம் மரங்கள் எங்கே?

கோவையில் வளர்ச்சிப் பணிகளுக்காக பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்ட பின்பு, அரசும், பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து வைத்த மரங்கள் என்னவாயின என்ற கேள்வி எழுந்துள்ளது.கோவை நகரம், கடந்த 25 ஆண்டுகளில், மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக இருந்த கோவை, இந்த கால் நுாற்றாண்டு காலத்தில், பரப்பளவு, மக்கள் தொகை, வருவாய் என பல விதங்களிலும் வளர்ந்து, மாநிலத்தின் இரண்டாவது நகரமாகவும், தேசிய அளவில் வேகமாக வளரும் நகரமாகவும் அடையாளம் பெற்றுள்ளது.தொழில் வளம் பெருகிய காரணத்தால், வேலை வாய்ப்பும், மக்கள் தொகையும் பல மடங்கு உயர்ந்துள்ளது; அதன் தொடர்ச்சியாக, வாகனங்கள் பெருத்துள்ளன; அதற்கேற்ப, ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன; விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக உருமாறியுள்ளன.

மரணித்த மரங்கள்

வளர்ச்சிப் பணிகளுக்காக, நகரில் இருந்த பல ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. கடந்த 2006-2011 இடையிலான தி.மு.க., ஆட்சியில், அவிநாசி ரோடு விரிவாக்கத்துக்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. அவற்றுக்குப் பதிலாக, மாற்று மரங்கள் நடப்படும் என்று கூறப்பட்டது; ஆனால் எங்குமே மரங்கள் வளர்க்கப்படவில்லை. ரோடு பணிக்காக வெட்டிய மரத்துக்கு ஒன்றுக்கு பத்தாக மரங்கள் நட வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி, அவிநாசி ரோட்டில் வெட்டப்பட்ட மரங்களுக்காக மட்டுமே, ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்களை, நெடுஞ்சாலைத்துறை நட்டு வளர்த்திருக்க வேண்டும்; ஆனால் மாற்றாக ஆயிரம் மரங்கள் கூட வைக்கப்படவில்லை. அதேபோல, தடாகம் ரோடு, பொள்ளாச்சி ரோடு போன்ற ரோடுகள் விரிவாக்கத்துக்காகவும் பல ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆகியவை, அந்த மரங்களுக்கு மாற்றாக எங்குமே மரங்களை வளர்க்க வில்லை.

வெற்று அறிவிப்புகள்

கடந்த 2010ல் செம்மொழி மாநாட்டின்போது, கோவையில் வனத்துறையால் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்படும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் ஆயிரம் மரங்களைக் கூட வனத்துறை வளர்க்கவில்லை.ஆட்சி மாற்றத்துக்குப் பின், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் 64 ஆயிரம், 65 ஆயிரம் மரங்கள் நடப்படுமென்று அப்போதிருந்த அமைச்சர்கள் அறிவித்து, அதற்கு விழாக்களும் எடுத்தார்கள். அந்த மரங்களை எங்கே வைத்தார்கள், எவ்வளவு வளர்த்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.அரசும், அரசியல்வாதிகளும் தான் இப்படி என்றால், கோவையில் பல்வேறு அமைப்புகளும், மரம் வளர்க்கும் பெயரில் வெறும் 'பப்ளிசிட்டி'யோடு கணக்கை முடித்துக் கொண்டுள்ளன. அவசியமின்றி மரங்களை வெட்டுவது முதலில் நிறுத்தப்பட வேண்டியது மிகமிக முக்கியம்!

எங்கும் வெறுமை; எங்கே குளுமை!

கோவை நகரில் கடந்த 20 ஆண்டுகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பாதியளவுக்குக் கூட, மரங்கள் வளர்க்கப்படவில்லை. மாறாக, மாநகராட்சி ரோடுகளில், வேளாண் பல்கலை வளாகத்தில், பல்வேறு அரசு அலுவலகங்களில், பூங்காக்களில் என இப்போதும் மரங்கள் வெட்டப்படுவது அன்றாடச் சடங்காக நடந்து கொண்டேயிருக்கிறது; அதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியுமில்லை.கோவையில் இப்போது வரலாறு காணாத அளவுக்கு, வெப்பநிலை பதிவாகி, குளுமை தொலைந்து போனதற்கு இதுவும் முக்கியக் காரணம். அதிகரித்துள்ள கட்டடங்கள், வாகனங்களுக்கேற்ப பல லட்சம் மரங்களை நட்டு வளர்க்க வேண்டியது, இங்குள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கடமை. எல்லோரும் இணைந்தால் தான் இது சாத்தியம். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram
மே 03, 2024 17:45

Yes, i agree each and every person should have mindset to plant trees and should maintain them for their entire life like how we take care of our children this can be achieved with complete support of Government and Government employees especially highway departments, municipal departments, EB departments bcoz even if people are ready to plant trees one fine day the government officers as i mentioned earlier will say some reason and try to cut the grown trees i think firstly government departments should have adequate knowledge about environment and the necessity of growing the trees everywhere they are focusing how we can get money now they have turned their desire to cut down the trees and sell them i am not sure what green tribunal and other environmental based departments ate not bothered i hope they also get some money this needs to be stopped This earth has given us lot of things lile shelter , food , happiness, sad and lot more things, but in return what we have given back to this beautiful earth I think, apart from our each and every parents, we need to worship and save out earth Actually this climatic chaos is just a ning and this may increase or it gets worse in mere future So we are in the situation to save our earth and we can do it only by planting as many trees as possible If we still try to be silent and blaming each other is not going to work We need to get into action and have good end result i am damn sure still we have time and we all can achieve it


Kundalakesi
மே 03, 2024 16:05

மனித இனம் அழிந்தால் மட்டுமே உலகம் காப்பாற்றப்படும்


AMBROSE SANTHASEELAN L
மே 03, 2024 14:41

கோயம்புத்துாாில் உள்ள மரங்கள் எங்கே? எல்லாம் அரசியல்வாதிகள், மதவாதிகளின் ஆக்கிரமிப்பால் எல்லா மரங்களும் அழிந்து விட்டன பிறகு எங்கே மழை பொழிய போகிறது குளிா்ச்சியாக இருக்கப்போகிறது ஈஷா அறக்கட்டளை நினைத்தால் காடுகளை காப்பாற்றி இருக்கலாம் டிஜிஎஸ் தினகரன் காருண்யா பல்கலைக்கழகம் கட்ட, வழிக்கான எத்தனை மரங்கள் மற்றும் யானை வழித்தடங்கள் அழிக்கப்பட்டன மீண்டும் கோயம்புத்துாா் செழுமையாக இருக்க எல்லாரும் வழிவகை செய்யவேண்டும்


கண்ணகுமார்
மே 03, 2024 08:04

அந்த ஒரு லட்சம் வாக்காளர்கள் வெடி எடுத்துக்கிடு போயிட்டாங்க போல. கோயமுத்தூர்ல பிதுசா கட்டியிருக்கும்.காங்கிரீட் கட்டிடங்களை எண்ணிப்பாருங்க. கணக்கு சரியா வரும். இதுல பா.ஹ அங்கே ஜெயிச்சுனின்னும்.முன்னேத்தப் போறாங்க.


APR
மே 03, 2024 07:41

Due to this CBE climate is getting worse day by day, if this will continue there is a chance for natural disasters.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை