மேலும் செய்திகள்
ராகுல் - பிரியங்கா இடையே சண்டை: கொளுத்தி போடும் மத்திய அமைச்சர்
10 hour(s) ago | 1
தேவாரம், திருவாசக பாடல்கள் பாடப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, ஹிந்து சம்பிரதாயப்படி பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாது, சர்வ மத பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டு, புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர், இரவு பகல் பாராது, இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட உழைப்பின் உச்சகட்டமாக, நேற்று புதுடில்லியில் புதிய பார்லி., கட்டடத்தின் திறப்பு விழா திட்டமிட்டபடி விமரிசையாக நடந்தேறியது.அந்த பகுதி முழுதுமே பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், பூஜை மற்றும் திறப்பு விழா என, இரண்டு கட்டங்களாக நிகழ்ச்சிகள் நடந்தன. 'செங்கோல் நிறுவப்படுவது பெருமைக்குரிய விஷயம்'
தற்போது பார்லிமென்டில் நிறுவப்பட்டுள்ள செங்கோல், இதற்கு முன், பல ஆண்டுகளாக உ.பி.,யில் உள்ள அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த அருங்காட்சியக அதிகாரிகள் கூறியதாவது:அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 'செங்கோல்' புதிய பார்லி.,யில் நிறுவப்பட்டது, எங்களுக்கு மட்டுமல்லாமல், பிரயாக்ராஜ் மக்களுக்கும் பெருமைக்குரிய விஷயம். நல்ல விஷயத்திற்காக செங்கோல் பயன்படுத்தப்பட்டது, ஓர் உணர்ச்சிகரமான தருணம். செங்கோல் குறித்து அறிய மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், அருங்காட்சியகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அருங்காட்சியகத்தில் செங்கோலின் மாதிரி நிறுவப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ராஜ்யசபாவுக்கு 'தாமரை' லோக்சபாவுக்கு 'மயில்'
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 900 கைவினை கலைஞர்களால் நெய்யப்பட்ட தரை விரிப்பு கம்பளங்கள், புதிய பார்லிமென்டை அலங்கரிக்க உள்ளன. தேசிய பறவையான மயில் உருவம்நெய்யப்பட்ட தரை விரிப்பு கம்பளம், லோக்சபாவுக்கும்; தேசிய மலரான தாமரை உருவம் நெய்யப்பட்ட தரை விரிப்பு கம்பளம், ராஜ்யசபாவுக்கும் வழங்கப்பட்டன.இவற்றை, 100 ஆண்டுகள் பழமையான பிரபல, 'ஓபீடீ கார்பெட்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் பணியில், உ.பி.,யின் பதோஹி மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் ஈடுபட்டனர். தரை விரிப்புகளை தனித்தனியாக வடிவமைத்து, அவற்றைநெசவாளர்கள் ஒன்றாக இணைத்துள்ளனர்.கவுரவம்
புதிய பார்லி., கட்டடத்தின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை, பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், அவர்களுக்கு பாரம்பரிய சால்வைகளை வழங்கிய பிரதமர் மோடி, நினைவுப்பரிசுகளையும் அளித்து கவுரவப்படுத்தினார்.வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் எழுதப்படும்புதிய பார்லி., கட்டட திறப்பு விழா, நாட்டின் வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் எழுதப்படும். இது, நாட்டு மக்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்த புதிய கட்டடம், நம் ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.திரவுபதி முர்முஜனாதிபதிநாட்டின் வளர்ச்சிக்குசாட்சியாக இருக்கும்சுயசார்பு இந்தியாவை உருவாக்குவது முதல், மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை, வரும் ஆண்டுகளில் பல வரலாற்று தருணங்களின் அத்தியாயத்தை, இந்த புகழ்பெற்ற கட்டடம் எழுதும்.ஜக்தீப் தன்கர்துணை ஜனாதிபதி, ராஜ்யசபா தலைவர்தன் அர்ப்பணிப்பை மோடி உறுதி செய்துள்ளார்இந்த கட்டடமானது, புதிய யோசனைகளுக்கான உத்வேகத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஜனநாயகத்தின் பிறப்பிடமே, இந்தியா தான். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவியதன் வாயிலாக, பாரபட்சமற்ற தலைமையை நோக்கிய தன் அர்ப்பணிப்பை பிரதமர் உறுதி செய்துள்ளார்.ஓம் பிர்லாலோக்சபா சபாநாயகர்இந்திய மக்களின்நம்பிக்கைக்கான சின்னம்நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான, ஒரு வரலாற்று சின்னமாக புதிய பார்லி., இருக்கும். உலகிற்கு இந்தியா தலைமை தாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.ஹரிவன்ஷ்ராஜ்யசபா துணைத் தலைவர்திறப்பு விழாவா...முடிசூட்டு விழாவா?பார்லிமென்ட் என்பது மக்களின் குரலை பிரதிபலிக்கக் கூடியது. ஆனால், அதன் திறப்பு விழாவை முடி சூட்டு விழா போல் பிரதமர் மோடி கருதுகிறார்.ராகுல்முன்னாள் தலைவர்,காங்கிரஸ்அடையாளங்களுக்கு ஆதரவு தர வேண்டும்இந்தியாவில் இப்போது இறையாண்மைக்கு உட்பட்ட மக்களாட்சி தான் நடக்கிறது. எனவே, நிகழ்காலத்தின் மதிப்பீடுகளை உறுதி செய்ய, செங்கோல் போன்ற கடந்த காலத்தின் அடையாளங்களுக்கு ஆதரவு தருவதே சிறந்தது.சசி தரூர்லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
10 hour(s) ago | 1