உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூரில் நாளை ஆடிப்பூர விழா

பாகூரில் நாளை ஆடிப்பூர விழா

பாகூர் : பாகூர் முத்தாலம்மன் கோவிலில், நாளை (7ம் தேதி) ஆடிப்பூர திருவிழா நடக்கிறது.பாகூரில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை (7ம் தேதி) ஆடிப்பூர திருவிழா நடக்கிறது. இதனையொட்டி, இன்று (6ம் தேதி) இரவு 7 மணிக்கு கலச ஸ்தாபனம் நடக்கிறது. 7ம் தேதி காலை 7 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணமும், 9 மணிக்கு வளையல் அணிவித்தல் மற்றும் சோடஷ உபசாரத்தடன் மகா தீபாரதனை நடக்கிறது. 9.30 மணிக்கு பாததாங்கியுடன் அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை