உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அட்டவணை இனமக்கள் சலுகை பெற அரசாணை வெளியிட வேண்டும் முதல்வரிடம் அ.தி.மு.க., மனு

அட்டவணை இனமக்கள் சலுகை பெற அரசாணை வெளியிட வேண்டும் முதல்வரிடம் அ.தி.மு.க., மனு

புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையிலான நிர்வாகிகள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவில்; அரசியல் அமைப்பு (புதுச்சேரி) பட்டியலிடப்பட்ட சாதிகள் ஆணை 1964 உத்தரவில், 15 சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பிறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என வேறுபாடு இப்பிரதேசத்தில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே ஜனாதிபதி அறிவிப்பில் இருந்தது.இதனை தவறாக புரிந்து கொண்டு, 1964 க்கு முன்பு பிறந்தவர்கள் மட்டுமே சலுகைகள் வழங்கப்படும் என்ற இரு அரசாணைகள் புதுச்சேரி அரசு கடந்த 2002ல் வெளியிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில் புதுச்சேரி அரசின் 2 அரசாணைகள் ரத்து செய்து, பட்டியல் சாதியினரிடம் பூர்வீகம், புலம்பெயர்ந்தவர்கள் என வேறுபாடு பார்க்காமல் இப்பிரதேசத்தில் பிறந்தவர்கள் என கருத வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட இரு அரசாணைகளை புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருவது நீதிமன்றத்தில் அவமதிக்கும் செயல். காரைக்கால் சேர்ந்த ஜெயா தொடர்ந்த வழக்கில், ஆதிதிராவிடர் பூர்வீகம் என்பதில் ஆண்கள் மட்டும் கருத்தில் கொள்ளாமல், பெண்களை கருத்தில் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த 2004ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில், உயர்நீதிமன்ற தீர்ப்பை கடந்த 2023 ஏப்., மாதம் உறுதி செய்தது. அதன்படி, பூர்வீகமான பெண்களை பெற்றோராக கருதி, அவர்களின் பிள்ளைகளுக்கு 1964 படி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவு பெற்று 15 மாத காலதமாகியும், புதுச்சேரி அரசு ஆணை வெளியிடவில்லை. ஓ.பி.சி., இடஒதுக்கீடு போல், 2001ம் ஆண்டிற்கு முன்பு வசித்த அட்டவணை இன மக்களுக்கும் அனைத்து உரிமை பெற அரசாணை வெளியிட வேண்டும். நல்ல முடிவை சட்டசபை கூட்ட தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும் என அதில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை