உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சனீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

சனீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டில் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் தங்கதேர், அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க ஐந்து இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.அதில், அன்னதான உண்டியல் நிரம்பியதை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று தருமபுர ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்