உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பங்குனி உத்திர விழா

பங்குனி உத்திர விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி சித்தி விநாயகர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது.இதையொட்டி, காலை 7:00 மணிக்கு தேவஸ்தான பூந்தோட்டத்தில் காவடி அபிேஷகம், தொடர்ந்து காவடி, பால் குடம் வீதியுலா நடந்தது. இதையடுத்து சுப்ரமணியர், தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இடும் பன் சுவாமிக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மின் அலங்காரத்துடன், சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ