உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக பயணம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக பயணம்

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நேற்று மாலை பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் நடைபெற்றது.வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து ஆன்மிக பயணம் துவங்கியது. நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டு சென்றனர். அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை விநாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதன் ஆலயத்தில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக சென்று திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் வழிபட்டனர். உறுவையாறு மற்றும் கோட்டைமேடு வழியாக மீண்டும் கோவிலை இரவு 10:45 மணியளவில் வந்தடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை