மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி புதுச்சேரி வீரர் முதலிடம்
3 hour(s) ago
சூறைகாற்றுடன் கனமழை
3 hour(s) ago
விநாயகர் சதுர்த்தி விழா: கலாசார நிகழ்ச்சி
5 hour(s) ago
புதிய சிந்தனையை விதைத்துள்ளது: ஆசிரியர்கள் பேட்டி
6 hour(s) ago
புதுச்சேரியில்: வான்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 22 ஆயிரம் வான் கோழி குஞ்சுகள் மானிய விலை வழங்கும் பணி நடந்து வருகிறது. புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், புதுச்சேரியில் வான்கோழி வளர்ப்பு முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரித்தல், புரதச் சத்து தேவையை மேம்படுத்துதல் மற்றும் பயனாளிகளிடையே வீட்டுப்புற வான்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக 22 ஆயிரம் வான் கோழிக்குஞ்சுகளை மானிய விலையில் வழங்கும் பணி, கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் தலைமையில் துவங்கியது. அதனை தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள 9 கால்நடை மருத்துவமனை மருந்தகங்களில், ஒரு பயனாளிக்கு, 6 வாரம் வளர்ந்த 4 வான்கோழி குஞ்சுகள் ரூ. 540 க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதனையொட்டி, புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மருந்தகத்தில் இணை இயக்குனர் காந்திமதி தலைமையில் கால்நடை மருத்துவர் சரளாதேவி நேற்று முதற்கட்டமாக 1,000 வான் கோழி குஞ்சுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago