உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

வில்லியனுார்: வில்லியனுார் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வில்லியனுார் போலீஸ் சரக பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் மாலை சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் ஓதியம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் தனியார் பள்ளி அருகே நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்த விசாரித்தனர்.இதில் வில்லியனுார் கோட்டைமேடு நடுத்தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் முகிலன்,25; என தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள 57 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர், போலீசார் முகிலன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி