உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

வில்லியனுார்: வில்லியனுாரில் நகராட்சி ஊழியரை தாக்கி பணம் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த முரளி,57; இவர் புதுச்சேரி நகராட்சியில் ஊழியராக வேலை செய்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஆரியப்பாளையம் சாராயக்கடை சாலையில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற முரளியை,  ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் சுரேந்தர்,25; வழிமறித்து தாக்கி, முரளி வைத்திருந்த 600 ரொக்க பணம் மற்றும் ஒரு மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். முரளி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் சுரேந்தர் மீது  போலீசார் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை