| ADDED : மே 30, 2024 10:39 PM
பாங்காக்: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றின் காலிறுதிக்கு இந்தியாவின் சச்சின் (57 கிலோ) முன்னேறினார்.தாய்லாந்தில், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று நடக்கிறது. ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சச்சின் சிவாச், துருக்கியின் படுஹான் சிப்ட்சி மோதினர். இதில் சச்சின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான 92 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சஞ்ஜீத் குமார், வெனிசுலாவின் லுாயிஸ் சான்செஸ் மோதினர். இதில் சஞ்ஜீத் 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.பெண்களுக்கான 57 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா, அஜய்பெய்ஜானின் மஹ்சதி ஹம்சயேவா மோதினர். இதில் ஜெய்ஸ்மின் 5-0 என வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறினார்.