உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வீரருக்கு ரூ. 4,171... நிர்வாகிக்கு ரூ. 25,026 * பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்க முடிவு

வீரருக்கு ரூ. 4,171... நிர்வாகிக்கு ரூ. 25,026 * பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்க முடிவு

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை விட, உடன் செல்லும் நிர்வாகிகளுக்கு ஐந்து மடங்கு அதிக பணம் வழங்கப்பட உள்ளது.பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள், உடன் செல்லும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் பணம் குறித்த விபரம் வெளியானது. இதன் படி, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ரூ. 2 லட்சம் தரப்படுகிறது. பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் கிடைக்கும்.போட்டி நாட்களில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கும் வீரர், வீராங்கனைகள் செலவுகளுக்கு தினப்படியாக, 2021 டோக்கியோ ஒலிம்பிக் போல, ரூ. 4,171 மட்டும் பெறுவர். இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம் வீரர், வீராங்கனைகளுடன் செல்லும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஒலிம்பிக் கிராமத்தில் 5 நாள் தங்குவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 90,000 வழங்கப்படும். இத்துடன் நாள் ஒன்றுக்கு தினப்படியா ரூ. 25,026 தரப்பட உள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக்கில் (ரூ. 12,513), தரப்பட்டதை விட இரு மடங்கு அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை