உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் போபண்ணா ஜோடி

மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் போபண்ணா ஜோடி

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு போபண்ணா ஜோடி முன்னேறியது.அமெரிக்காவில் மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-2' இடத்திலுள்ள இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, ஸ்பெயினின் கிரானலர்ஸ், அர்ஜென்டினாவின் ஜபல்லோஸ் ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-1 என கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி, அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. முடிவில் போபண்ணா ஜோடி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.மீண்டும் 'நம்பர்-1'கடந்த ஜன.,ல் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை வென்ற பின் போபண்ணா 44, இரட்டையர் உலகின் 'நம்பர்-1' ஆன மூத்த வீரர் ஆனார். அடுத்தடுத்த தொடரில் ஏமாற்றியதால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது பைனலுக்கு முன்னேறியதை அடுத்து, ஏப். 1ல் வெளியாகும் புதிய பட்டியலில் போபண்ணா, மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடிக்கவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை