உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

செங்கல்பட்டு:மாமண்டூர் தலைமை நீரேற்றும் நிலையத்தில், பராமரிப்பு பணி செய்ய, 23.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.செங்கல்பட்டு நகராட்சிக்கு, மாமண்டூர் பாலாற்றில் தலைமை நீரேற்றும் நிலையம் உள்ளது. அங்கு, இரண்டு நீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் 11 ஆழ்துளை கிணறுகள் உள்ளன.பாலாற்றின் படுகையிலிருந்து தரைமட்ட தொட்டி, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி உள்ளது. 60 எச்.பி., திறன்கொண்ட மின் மோட்டார் மற்றும் மின்தடை காலங்களில் ஜெனரேட்டர் இயக்கப்படுகிறது.குடிநீரில் குளோரின் அளவு சரியாக கலக்க, பணியாளர்களை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இங்கு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 2024- - 25ம் ஆண்டில், ஓராண்டு வரை பணி மேற்கொள்ள, 23.10 ரூபாய் செலவு செய்ய, நகரசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை