உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடலுாரில் சீரழிந்த மீன் இறங்குதளம் புதிய தளம் அமைக்க வலியுறுத்தல்

கடலுாரில் சீரழிந்த மீன் இறங்குதளம் புதிய தளம் அமைக்க வலியுறுத்தல்

கடலுார் : செங்கல்பட்டு மாவட்டத்தில், மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக, பல வசதிகளுடன் மீன் இறங்குதளம் அமைக்க, மத்திய அரசு, கடந்த 2006ல், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், 5 கோடி ரூபாய் ஒதுக்கியது. கடலுார் பெரியகுப்பத்தில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவெடுத்தது. மீனவர்கள், 4.5 ஏக்கர் பட்டா இடத்தை, அரசிடம் இலவசமாக ஒப்படைத்தனர்.கடந்த 2010ல், 3 கோடி ரூபாய் மதிப்பில், முதல்கட்ட கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. நான்கு வலைப்பின்னல் கூடங்கள், தலா 20 அறைகள் கொண்ட ஆறு பொருட்கள் பாதுகாப்பகங்கள், இரண்டு ஏல கூடங்கள் கட்டப்பட்டன.அதோடு, நிர்வாக அலுவலகம், வங்கி அலுவலகம், பாதுகாவலர் அறை, மின்சார அறை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சாலைகள், மின் விளக்குகள், சுற்றுச்சுவர் ஆகியவை அமைத்து, 2012ல் பணிகள் முடிக்கப்பட்டன.அடுத்து, 2 கோடி ரூபாய் மதிப்பில், குளிர்பதன கிடங்கு, மீன் பதப்படுத்துதல் கிடங்கு, எரிபொருள் கலன் உள்ளிட்டவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.ஆனால், அதற்குள்ளாகவே மீன் இறங்குதளம் கடலரிப்பால் சேதமடைய துவங்கியது. சுற்றுச்சுவர் கடலில் சரிந்தது. கட்டடங்களும் நாளடைவில் பாதிக்கப்பட்டன.கடலரிப்பை தடுக்க, 25 கோடி ரூபாய் மதிப்பில், கடலில் அமைக்கப்பட்ட 'டைக்' எனப்படும் மணல் அணை, மீன் இறங்குதளத்தை பாதுகாக்க, 1 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 'கேபியான் பாக்ஸ்' ஆகிய திட்டங்கள் பயனளிக்காமல் வீணாகின.தற்போது, 31 கோடி ரூபாய் மதிப்பில், மீனவ பகுதிகளை ஒருங்கிணைத்து, கடலரிப்பை தடுக்க நேர்கல் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சின்னகுப்பம், ஆலிகுப்பம் ஆகிய பகுதிகளில் மீன் இறங்குதளமும், இதே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.இப்பணி நடந்தபோது ஆய்வுசெய்த முந்தைய கலெக்டர் ராகுல்நாத், சீரழிந்த மீன் இறங்குதளத்தை இடிக்க அறிவுறுத்தினார்.நேர்கல் தடுப்பால், தற்போது கடற்கரை மணற்பரப்பு உருவாகி வரும் சூழலில், பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என, பெரிய குப்பம் மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மீன் இறங்குதளம், கடலரிப்பால் சேதமடைந்துள்ளது. இப்போது, கல் தடுப்பு உள்ளதால், கடலரிப்பு படிப்படியாக குறைந்து, கடற்கரை உருவாகிறது.பழைய கட்டடங்களை பயன்படுத்த முடியாது. அவற்றை இடித்துவிட்டு புதிதாக கட்ட, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ