மேலும் செய்திகள்
பட்டம் வினாடி - வினா போட்டி
3 hour(s) ago
பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு
3 hour(s) ago
இந்திய நாட்டிய விழா வரும் 21ல் துவக்கம்
3 hour(s) ago
இன்று இனிதாக ... (13.12.2025) செங்கல்பட்டு
3 hour(s) ago
கூடுவாஞ்சேரி:வண்டலுார் மேம்பாலத்தில் இருந்து, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறங்களிலும், மண் குவியல்களாக சேர்ந்துள்ளன.அது மட்டுமின்றி, சாலையில் ஏற்பட்டுள்ள அதிக பள்ளங்களால், வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறங்களிலும், ஆங்காங்கே பள்ளங்களும், அதிக அளவில் மண் திட்டுகளும் காணப்படுகின்றன.மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் வரை, அதிக அளவிலான மண் திட்டுகள் சேர்ந்துள்ளன.இருசக்கர வாகனங்களில் செல்வோர், அதில் நிலை தடுமாறி செல்கின்றனர். அதனால், சாலையில் ஏற்பட்டுள்ள மண் குவியல்களையும், பள்ளங்களையும் சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago